பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

115



1074. “தட்ப வெட்ப நிலைகள் உடல் நலமுடை யோருக்குத் தீங்கு செய்வதில்லை.”

1075. “பிரிவினைகளும் வேற்றுமைகளும் உள்ள வரையில், மனிதகுலம் அமைதியாக வாழஇயலாது.”

1076. “குறுகிய பாதைகள் பயணத்திற்கு ஏற்புடையன ஆகா! அதுபோலக் குறுகிய நோக்கங்கள் வாழ்க்கைப் பயணத்திற்குப் பயன்தரா.”

1077. “உரிமையியல் சட்டம் அனைவருக்கும் ஒன்றாதல் நல்லது.”

1078. “இந்து சமுதாயத்தில் நிலவும் பிரிவினைகள் வழி, சிலர் ஆக்கம் அடைகின்றனர். அதனால், ஒன்று படுத்தும் பணி எளிதன்று.”

1079. “நமது சமுதாயக் கட்டமைப்பில் அஸ்திவாரம் சந்தேகம்.”

1080. “மகளிர், தங்களுடைய வாழ்க்கையில் பெறற்கரியது உரிமை என்று கருதிவிட்டால் விடுதலை கிடைத்துவிடும்.”

1081. “கல்வித் திறனும் பொறுப்பும் உடைய மாணவர்கள் பள்ளிக்கு வராமலே கற்றுக் கொண்டு விடுவர்.”

1082. “சுற்றுப்புறச் சூழ்நிலை சரியில்லை என்று கூறுகிறவர்கள் பேராட்ட உணர்வில்லாமல் பிழைப்பு நடத்துபவர்கள்.”

1083. “எதற்கும் சமாதானம் சொல்லமுடியும். ஆனால், ஏற்றுக்கொள்ள இயலாது.”

1084. “இன்றைய ஆசிரியர்களைப்போல மூளைச் சோம்பேறிகள் என்றும் இருந்ததில்லை,”