பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

123



1162. “காமம்-அறிவார்ந்த இன்பம் வரவேற்கத்தக்கது. காமம் களியாட்டமாயின் தரம் குறையும்.”

1163. “ஒரு குழந்தைக்கும் பெற்றோராதல் பெறற் கரிய பேறு.”

1164. “மனவெழுச்சி அடங்கிய நிலையே பூசகர் ஆதலுக்குத் தகுதி.”

1165. “துழ்நிலைகளை எதிர்த்துப் போராடுவதே உய்திக்கு வழி.”

1166. “உலகந்தழிஇய ஒட்பம் பெறுதலே இன்று முதற்கடமை.(ஒட்பம்-மேன்மை)

1167. “நன்மைகளுக்கெல்லாம் நன்மை அழுக்கா றின்மையே.”

1168. “காமம்’-உயிர்களுக்கு விருப்பம் நிறைந்த வாழ்க்கையைத் தூண்டுவது.”

1169. “துய்த்தல் பாபம் இல்லை. துய்க்கும் பாங்கியல் தான் புண்ணிய, பாபம் கருக் கொள்கிறது.”

1170. “செய்யும் செயல்கள் பயன் தருவதில்லை. நோக்கங்களே பயனைத் தரவல்லன.”

1171. “வன்தன்மை’ - கொள்ளுதல் வாழ்க்கை வெற்றிகளைக் கெடுக்கும்.”

1172. “திருத்தமுறச் செய்பவர்கள் கிடைக்காது போனால் நாமே செய்துவிடுவது நல்லது.”

1173. “யார் இறந்தால் என்ன? சச்சரவு நிற்குமா?”

1174. “குடும்ப உறவுகள் செழித்து வளர்வதே நாகரிகத்தின் அடிப்படை,”