பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

தவத்திரு அடிகளார்



1175. உயிர்கள் மன விகாரமின்றிச் செழித்து வளர்தலே நாகரிகத்தின் அடிப்படை.”

1176. “சுழலும் இராட்டையாகிவிட்டது இன்றைய மானுட வாழ்க்கை.”

1177. “கட்சி ஜனநாயகம் இல்லையானால் ஆட்சியில் அமர்பவர்கள் கெட்டுப் போவார்கள்.”

1178. “உணர்வு பூர்வமாக ஒன்றைச் செய்ய முன்வராதவர்களிடம் பணியை ஒப்படைப்பது தவறு.”

1179. “இன்றைய இளைஞர்கள் ஆசைப்படுகின்றனர். ஆனால் அறிவறிந்த ஆள்வினையில் விருப்பமில்லை.”

1180. “உழைப்பால் ஆள உலகத்தில் உழைப்பினை விலையாகத் தராமல் வாழ நினைப்பது குற்றம்.”

1181. “குறைவாகச் செய்தாலும் முறையும் ஒழுங்கும் தழுவிய செயல்முறை தேவை.”

1182. “பணம் தேவையிருக்கிறது. பனம் வரும் வாயிலும் இருக்கிறது. ஆனால், எடுப்பாரைத்தான் காணோம்.”

1183. “பயிற்சி பெறாத உழைப்பாளிகள் செய்வார்கள். ஆனால் போதிய பயன் இருக்காது.”

1184. “கூட்டத்தைக் குறை! உழைப்பின் தரத்தை உயர்த்துக.”

1185. “விதிமுறைகள், சென்ற காலப் படிப்பினைகள் ஈன்ற குழந்தைகளேயாம்.”

1186. “தற்காப்பு உணர்வு” முனைப்பாக இருப்பவர்கள் கலந்து பேச மறுப்பார்கள்.”