பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்தனைத் துளிகள்

133


1272. “பெரிய மனிதர்களுக்கு நோய் வருவதே ஒரு சித்திரவதை! தண்டனை!”

1273. “பல நூறு துளிகள் சேர்ந்ததுதான் ஆழ்கடல்; காசுகளாகச் சேர்க்கப் பெற்றால் செல்வமும் கோடியாகி விடும்.”

1274. “சில்லறை உறவுகள் செல்வத்திற்குக் கேடு.”

1275. “ஏழைகளிடத்தில் உள்ள ஐயப்பாடே முன்னேற்றத்திற்கு முதல் தடை.”

1276. “வேண்டுவார் வேண்டுவதெல்லாம் இறைவன் வழங்கி விட்டால், உலகம் விசித்திர விலங்கு கூடாரமாகிவிடும். அதனால்தான் இறைவன் வழங்கத் தக்கதையே வழங்குகிறான்!”

1277. “கல்லில் முளை அடிப்பதும், கல்லாதவருக்கு உபதேசிப்பதும் வீண்.”

1278. “ஆசைப்படுபவர்களும், நிர்வாண சாதுக்களும் வெட்கத்தை விட்டவர்கள்.”

1279. “பதவியில் சுகம் இருக்கிற வரை போட்டிகளைத் தவிர்க்க இயலாது.”

1280. “நிறுவனத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்காத ஊழியர்களைக் கொண்டு நிறுவனத்தைக் காப்பாற்ற இயலாது.”

1281. "அர்ப்பணிப்பு உணர்வில்லாத அமைப்பில், மேலாண்மை கல்வி ஏற்புடைய தக்கவராக அமைத்தல் வேண்டும்."

1282. “தனக்கு இவர் உதவியே தீர்வார் என்ற நம்பிக்கையும் கூட, வாழ்க்கையில் அலட்சியத்தைத் தோற்றுவிக்கிறது”.