பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

தவத்திரு அடிகளார்



1334. “உழைக்காது உண்பவர்க்கு இயற்கை வழங்கும் தண்டனை தான் நோய்.”

1335. “சில தீர்மானங்கள் எடுத்தாலும், செயற்படுத்தப்படுவது நல்லது.”

1336. “பிழைபடச் செய்வார் வருந்தி மாற்றிக் கொள்ளாமைக்குக் காரணம், ஒன்று அறியாமையாக இருக்கவேண்டும் அல்லது அகந்தையாக இருக்க வேண்டும்.”

1337. “சிறிய சிறிய தவறுகளிலிருந்தே பெரிய தவறுகள் தோன்றுகின்றன.”

1338. “படிப்பிக்கும் ஆசிரியர்கள் சுறுசுறுப்பாக இருந்தால், நாடே சுறுசுறுப்பாக இயங்கும்.”

1339. “கடமைகளைவிட காப்பி, தேநீர் அருந்தல் முதன்மைப் பெற்றுவிட்டால் யார்தான் காப்பாற்ற இயலும்.”

1340. “வயிறு இல்லாது போனால் பலர் வேலை செய்யமாட்டார்கள்.”

1341. “அன்பு இல்லாத இடத்தில் மகிழ்ச்சி இல்லை!”

1342. “கருணைக்கு விஞ்சிய சிறப்புடையது இந்த வையகத்தில் இல்லை.”

1343. “ஒவ்வொரு செங்கல்லாக அடுக்கிக் கட்டியதில் உருவானதே மாளிகை. அதுபோல ஒவ்வொரு செயலாகத்தான் புகழ்பூத்த வாழ்வு உருப்பெறுகிறது.”

1344. “ஒருவர் வாழ்வு, பிறிதொருவர் வாழ்வின் நலனுடன் பிணைந்துவிடின் வாழ்வித்து வாழும் பண்பு கால் கொள்ளும்.”