பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

தவத்திரு அடிகளார்



1357. “நிர்வாகியைவிட உழைப்பாளரே உயர்ந்தவர்.”

1358. “இந்திய சமூக அமைப்பில் நிர்வாகிகளை விட, தொழிலாளிகள் குறைவான ஊதியமே பெறுகிறார்கள்.”

1359. “சுதந்தரம் என்பது அனுபவிக்கத் தக்கது. ஆனால் சுதந்தரத்தை அனுபவிக்கும் திறன் எளிதில் வருவதில்லை.”

1360. “அதிகாரத்தால் ஒன்றைச் செய்வதைவிட, அன்பான அணுகுமுறையால் செய்வது பயனுடைய பண்பாட்டு முறை.”

1361. “கூட்டுறவு என்பது, இருக்கும் பிரிவினைகளைக் கடந்து ஒன்றுபடுவது.”

1362. “இன்று கையூட்டு தேசியமயமாகி விட்டது.”

1363. “விருப்பம்-விழைவு இவற்றில் பிறந்து வளர்ந்த கையூட்டு இன்று கட்டாயமாகி விட்டது.”

1364. “மனிதர்கள் எடுத்த தீர்மானங்கள் செயலுருக் கொண்டிருந்தால் உலகம் சொர்க்கமாகி இருக்கும்.”

1365. “செயற்பாட்டுக்கு வராத, அரசு ஆணைகளே மிகுதி.”

1366. “தொடர்புடையார் கருத்தறியாமல் ஒரு கோப்பினை முடிப்பது தவறு.”

1367. “மனிதகுலம் ஒன்றே! இதுவே இயற்தை! பிரிவினைகள் இயற்கைக்கு மாறானவை.”

1368. “மனிதகுலம் முழுமையடைய முதற்பகை வறுமை."