பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

141



1369. “வறுமை ஏற்றத்தாழ்வு - இவைகளை வாயில்களாகக் கொண்டே பகை தோன்றுகிறது.”

1370. “வரலாறு தொடர்ந்து இயங்குகிறது. இந்த வரலாற்றியக்கத்தைக் கூர்ந்தறிந்து கற்பவர்கள், வாழ்க்கையில் வெற்றிபெறுவார்கள்.”

1371. “இந்திய சிந்தனையாளர்கள் துறவு மனப் பான்மையுடையோராய், அரசுக் கட்டிலுக்கு வராமையினாலேயே நமது நாட்டுச் சிந்தனையாளர்கள் தோற்றார்கள்.”

1372. “புத்தர் கூட துன்ப நீக்கத்திற்கு வழி துறவென்றே கண்டார்.”

1373. “ஒரு பொருளின் மதிப்பைக் கூட்டுவது உழைப்பு.”

1374. “தங்கம் விலை மதிப்புடையதுதான். ஆனால், அத்தங்கத்தின் மதிப்பறிய, சாதா மதிப்புடைய மாற்றுக்கல் தான் பயன்படுகிறது. அதுபோல, உயர்ந்த சிந்தனைகள் கூட சராசரி மனிதரிடத்தில் தோற்றுவிக்கும் தாக்கங்களைப் பொறுத்தே மதிப்பிடப் பெறும்.”

1375. “வழிவழி வரும் பழக்கங்களுக்கு ஒரு அரசாங்கத்தைவிட அதிக செல்வாக்கு உண்டு.”

1376. “இந்திய சுதந்தரப் பிரசவமே பலவீனமான கஷ்ட நிலைதான்!”

1377. “ஆங்கிலேயர்கள் போய்விட்டாலும், அவர்கள் விதைத்த இன, மொழி, சமயப் பிரிவினை நச்சு விதைகள் செழித்து வளர்கின்றன.”

1378. “தீவிர சமயவாதிகளுக்கு இந்த உலகத்தை விட அடுத்த உலகத்தைப் பற்றிய கவலையே அதிகம்.”