பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

தவத்திரு அடிகளார்



1508. “ஒன்றைச் செய்து முடிப்பதில் உள்ள தொல்லைகளை-மற்றவர்கள் உணர்வதில்லை.”

1509. “அவசர உணர்ச்சி அறிவைக் கொன்று விடுகிறது.”

1510. “புகை வண்டிப் பெட்டியின் மீது ஏறி இருந்துகொண்ட குருவி, புகைவண்டி போகும்போது தான் யாத்திரை செய்ததாகக் கூற இயலாது. குருவிக்கு ஏது அனுபவம்?

1511. “உயிரின் உணர்வுகளை, வாழ்க்கையின் இலக்குகளை நோக்கி எடுத்துச் செல்லும் கருவியே இலக்கியம்.”

1512. “உணவுக்கு உப்புப் போல இலக்கிய அனுபவத்திற்கு ரசனை.”

1513. “நுண்மைத் தன்மையுடைய உணர்வு நிலையில் அமைந்த அனுபவங்கள் இப்போது இல்லை.”

1514. “பகுப்பொருளிலிருந்து நுண்பொருளுக்கும் செய்திகளிலிருந்து சிந்தனைக்கும் செல்லும் பயிற்சி இப்போது இல்லை.”

1515. “நமது சமய நிறுவனங்களில் பணி செய்பவர்கள், சேக்கிழார் படைத்துக் காட்டும் குடும்பங்களைப்போல வாழ்ந்தாலே போதும். மிகுதியும் பயன் விளையும்.”

1516. “இருப்பதில் அமைதிபெறும்-சமாளிக்கும் இயல்பு இயலாமையின் விளைவேயாம். சமாளித்தலை விட-சாதித்தலே சிறந்தது.”

1517. “சகிப்புத் தன்மை என்பது ஒருவகைக் கோழைத்தனமேயாம்.”