பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

தவத்திரு அடிகளார்



1550. “சிறந்த ஆளுமை வாயிலாகத் தலைமைக்கு வருதல் இயலும்”.

1551. “நம்முடைய ஆற்றல்-நம்மைச் சுற்றியுள்ள பொருள்களின் ஆற்றல்-ஆகிய அனைத்தும் பயன்படுமாறு பெற்ற நிலையே ஆளுமை நிலை”

1552. “வருகைப் பதிவேட்டின் மூலமே வருவாய் வரும் வாழ்க்கையைப் பலர் விரும்புகின்றனர்.”

1553. “உடலின் நலத்திற்கே உடை; ஆனால் இன்றைய நிலை... அதுவல்ல.”

1554. “ஒவ்வொரு கிராமத்திலும் செல்வம் குவிந்து கிடக்கிறது. உழைப்பால் வெளிக் கொணர்வாரைத் தான் காணோம்.”

1555. “எங்கும் வேலை நிறைய இருக்கிறது. ஆனால் செய்வோரைக் காணோம்; ஆனாலும் வேலை தேடி அலைபவர்களும் இருக்கிறார்கள்.”

1556. “இயற்கை-ஆண்-பெண் உணர்வுகளில் வேறுபாட்டைப் படைக்காதபோது; ஏன் ஆணுக்கு ஒரு நீதி-பெண்ணுக்கு ஒரு நீதி?”

1557. “ஆண் மறுமணம் செய்யலாம்-பெண் மறுமணம் செய்யக்கூடாது என்பது-இயற்கை நியதிகளுக்கு முரணானது.”

1558. “நிதியை நிர்வகிப்பதில் கண்டிப்பும், கண்ணோட்டமும் வேண்டற்பாலன.”

1559. “அனைத்தும் இருந்தும், ஒன்றும் இல்லாத நிலை-நிர்வாகத் தாழ்ச்சியையே பறைசாற்றுகிறது.”

1560. “வீடு எப்படி இருக்கிறது என்பதில் அல்ல. வாழ்க்கை-வீட்டில் உள்ளவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் பொறுத்ததேயாம்.”