பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

தவத்திரு அடிகளார்



1641. “அரசியலில் உள்ள ஆர்வம் செயற்பாடுகளில் இல்லையே!”

1642. “பசுமைக்கு ஈடு எதுவுமில்லை.”

1643. “நமது நாட்டின் அரசியல் பொது வாழ்க்கை கொல்குறும்பு செய்யும் கயவர்கள் கைக்குப் போய்க் கொண்டிருக்கிறது.”

1644. “அநீதிகளைக் கண்டிக்கத்தகாதவர்கள் அநீதிகளுக்கு உடன்பட்டவர்கள் தாம்.”

1645. “நாம் மெள்ள மெள்ள பழக்க வசத்தால் தீமைகளுக்கு உடன்பட்டுவிடுகின்றோம்.”

1646. “கம்யூனிஸ்டுகள் உரியவகையில் இந்திய நாட்டுக்குச் சேவை செய்யவில்லை.”

1647. “இந்திய கம்யூனிஸ்டுகள் பெயரால்தான். உண்மையான கம்யூனிஸ்ட்டுகள் அல்ல.”

1648. “எந்த நிலையிலும் யாதொன்றையும் விட்டுக் கொடுக்க முன்வராதவர்கள் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது.”

1649. “செலவுக்குப் பணம் தேடுதல், பணத்துக்குச் செலவு தேடுதல்; தேவைக்குப் பணம் தேடுதல்.”

1650. “மேற்றிசை நாடுகளில் சமூக நாகரிகம் வளர்ந்துள்ளது. ஆனால் இந்தியாவில் “சமூகமே’ இன்னும் உருவாகவில்லை.”

1651. “உதவி செய்தல் என்ற அறம், அறங்களில் எல்லாம் சிறந்த அறம்.”

1652. “உட்குழுக்கள் இல்லாத அமைப்புக்களால் தான், நாட்டுக்கு நல்லன செய்யமுடியும்.”