பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

173



1719. “அரிய கடமைகளைச் செய்பவர்களைவிட சோம்பேறிக்கு பொழுது எளிதில் போய்விடும். அவர்களுக்கு பொழுது போவது தெரியாததால்.”

1720. “ஒருநாட்டுமரத்தில் உயரிய இனத்தை ஒட்டுப்போட்டு உயரிய பழமரம் எளிதில் உருவாக்க முடிகிறது. ஆனால் எளிதில் மனிதர்களைப் படைக்க முடிவதில்லை.”

1721. “ஒன்றை ஒன்றால் ஈடுசெய்வது எளிது. பலவாக அனுமதித்தால் சுமையாகிவிடும்.”

1722. “கையாலாகாதவர்கள் - காலங்கடத்துபவர்களால், பிரச்சனைகளுக்குத் தீர்வு கான இயலாது.”

1723. “செயல்திறன் என்பது தாய். செயல்படுதலே தந்தை.”

1724. “உழைப்பும் - நுகர்வும் வாழ்க்கையை இயக்கும் இரண்டு உருளைகள்.”

1725. “சமூக அநீதிகள் - ஆட்சியிலமைந்து விட்டால் மக்களுக்கு விமோசனம் இல்லை.”

1726. “இந்திய நாட்டின் ஏழைகள் - அறிவும் தெளிவும் இல்லாதவர்கள், போராளியர்களும்,அல்ல; அறிவாளிகள் சுயநலவாதிகள் - சோம்பேறிகள்; அரசியல்வாதிகள் அதிகாரப் பசியினர்; செல்வந்தர்கள் நீரிழிவு நோயினர் ஆதலால் புரட்சி தடைப் படுகிறது.”

1727. “இந்திய மண்ணில் பொது உடைமை மலர நெடிய நாள் பிடிக்கும்.”

1728. “இந்தியாவில் கருத்துருவம் கொடுக்கும் கருவிகள் வலிமையாகவில்லை."