பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

தவத்திரு அடிகளார்



1752. “அன்பு-பக்தி-தொண்டு-பணி ஆகிய அனைத்துக்கும் அவ்வபொழுது கணக்கு முடித்து-கணக்கு பார்த்து புதுக்கணக்கு போடவேண்டும்.

1753. “இறைவனுடைய திருவருள் நிறைந்த ஆற்றல்கள்; கம்பிகளிலும்-கயிறுகளிலுமா செல்லும்”

1754. சடங்குகளில் மீண்டும் வீழ்தல் கூடாது.”

1755. “அன்று ஒரு சூரபதுமன்; இன்றோ ஆயிரம் ஆயிரம் சூரபதுமன்கள்.”

1756. “நயம்படப் பேசினால் மட்டும் போதாது - சூதில்லாமல் இரண்டு பொருள் படாமல் பேச வேண்டும்.”

1757. “என் மதம் உயர்ந்தது.” என்று கருதுபவர்கள், மதச் சண்டையை விலைகொடுத்து வாங்குகிறார்கள்.”

1758. “கேட்காமல் பேசுகிறவர்களிடம் சிக்கிக் கொண்டால் மெளனமாக இருப்பதே வழி.”

1759. “இன்பத்தில் துன்பக் கலப்பில்லாததே இன்பம்-அந்தமில் இன்பம்-சுத்த இன்பம். சுத்த இன்பம்.

1760. பிராரத்துவத்தை (நுகரும் வினை) மன நிறைவுடனும், மகிழ்வுடனும் அனுபவித்தால் புகைச்சல் இருக்காது-புழுக்கங்கள் இருக்காது.”

1761. “நெருப்பினுடைய எரியும் அளவுக்கு விஞ்சிட, ஆகுதிப் பொருளைப் போட்டால் வேள்வித் தீ எரிவதில்லை-பெருந்தீனிக் காரனின் ஆன்மா எழுச்சியடைவதில்லை.”

1762. “சோஷலிசம் வளரும் நாட்டில், கல்வி கூட்டுறவு தொழில் ஆகியவையே முதன்மையுடையன