பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

187


களாகத் தோன்றிக்கூடப் பின் காலப் போக்கில் கெட்டப் பழக்கங்களாகியிருக்கலாம்.”

1854. “பணத்தின் அருமை இன்றும் ஏழை களுக்குத் தெரியாது. கையில் ஐந்து ரூபாய் கொடுத்துப் பாருங்கள்.”

1855. “அன்னை இந்திராவின் ஆட்சிப் போக்கால் கடைக்கோடியில் நின்ற ஏழை மக்களுக்கு வாழ்வு கிடைத்தது.”

1856. “விசுவாசம் என்பதற்குரிய பொருளைக் கொச்சைப் படுத்தாமல் இருந்தால் ஒத்த மனத்துடன் பூரணமான ஒத்துழைத்தலையே குறிக்கும்.”

1857. “கூட்டுறவு இயக்க விழாவில், சுதந்திர தின விழாவில், குடியரசுத் தின விழாவில் ஆர்வம் காட்டாதவர்கள் எல்லாம் கட்சி அரசியல் விழாக்களில் ஆர்வம் காட்டுகிறார்கள். அறியாமையே காரணம்.”

1858. “நாடு ஒன்றாக இருக்கவேண்டும் என்று சொன்னால் போதாது. ஒன்றாக இருப்பதற்குரிய காரணங்கள் வளர்ந்தாகவேண்டும்.”

1859. “அங்கீகரிக்கப் பெற்ற நிறுவனங்கள் சொல்வதை நம்பவேண்டும். அதைப் பொய் என்று சொல்லலாகாது. அப்படிச் சொன்னால் நிறுவனங்கள் மக்களிடம் நம்பிக்கையை இழக்கும். அரசின் மதிப்பு குறையும்.”

1860. “செயலற்ற நிர்வாக இயந்திரம் இருப்பதை விட அது இல்லாமல் இருப்பதே மேல்.”

1861. “எளியவர்கள் தொடக்க நிலையிலேயே யாதொன்றையும் கூறுவதில்லை. அதனால் எளிதில் களைய முடிவதில்லை.”