பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

தவத்திரு அடிகளார்



1862. “நிதியை, வரவு-செலவு செய்தால் மட்டும் போதாது. நிதி நிர்வாகம் வேண்டும்.”

1863. “நிதி நிர்வாகம் பொறுப்புள்ள ஒன்று.”

1864. “நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைக்கு நாமும் பொறுப்பு என்று உணர்தல் அவசியம். இப்படி உணர்தல் வேலைக்கு உந்து சக்தியாக உதவி செய்யும்.”

1865. “ஒவ்வொரு குடும்பத் தலைவனும் தனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி நினைத்தாலே போதும். நல்ல நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பார்கள்.”

1866. “பணம் இருப்பதைவிட, பெரிய ஆபத்து பணம் இருப்பதாகக் காட்டி நடந்து கொள்வது-”

1867. “செல்வம் உடைமையில் எளிமை, செல்வத்திற்குப் பாதுகாப்பு.”

1868. “தன்னிறைவுக்கு நிகரான வலிமை இல்லை.”

1869. “சொன்னதைச் செய்பவர்கள் கடைநிலை. அடி ஒற்றிச் செய்பவர்கள் மத்திமம். நினைப்பதை நினைந்து செய்து முடிப்பவர்கள் உத்தமம்.”

1870. “இந்திய நாட்டு ஏழைகளின் தோள்கள் மீது சுரண்டும் சக்தி, வலிமையாக உட்கார்ந்திருக்கிறது. சுரண்டும் சக்தியிடமிருந்து ஏழைகளை மீட்பது கடினம்.”

1871. “ஒழுங்கு முறைகளுக்கு சட்டம் இயற்றுவதற்காகச் சட்டசபைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலிலேயே சட்டத்திற்கு மரியாதை இல்லை.”