பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

189



1872. “இன்று சட்டசபை உறுப்பினர் பதவி நாட்டுப் பற்றுக்கு உரியது அல்ல. அதிகார ஆசை, செல்வாக்குப் பெருமை ஆகியனவற்றுக்கேயாம்.”

1873. “இந்தியாவில் தேர்தலின் விலையும் உயர்ந்துவிட்டது.”

1874. “பிழைக்க மாட்டார் பிழைத்தாலும் வேலை செய்ய இயலாது என்று கூறுவதன் மூலம் எதிரியிடம் எவ்வளவு அச்சம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.”

1875. “ஆட்சி இயந்திரங்கள் எல்லாம் சரியாகத் தான் இருக்கின்றன. இயங்குவதுதான் இல்லை.”

1876. “பொறுப்புள்ள வாழ்க்கை என்பது புனித மானது. அன்பை ஆழப்படுத்தும்; நட்பை உறுதிப் படுத்தும்; நலத்தைக் கூட்டும்; இன்பத்தை வளர்க்கும், அழிவைத் தடுத்து நிறுத்தும்.”

1877. “எந்த வகையான பிரிவினை எண்ணங்களும் குழந்தைகள் மனத்தில் பதியாவண்ணம் பார்த்துக் கொள்ளல் அவசியம்.”

1878. “நமது தலைமுறையில் நாம் கண்ட மாபெருந்தலைவர்களையடுத்து வந்த தலைமுறையினர் தலைவர்கள் பெயரை மட்டுமே உச்சரிக்கின்றனர். தலைவர்களுடைய கொள்கைகளை விட்டு விட்டனர்.”

தலைவர்கள் பெயரைப் பயன்படுத்துவதற்குரிய காரணம் அத்தலைவர்கள் மக்களால் அங்கீகரிக்கப் பெற்றவர்கள். அத்தலைவர்களுக்கு மக்கள் வழங்கியுள்ள அங்கீகார நிழலிலேயே வாழ ஆசைப்படுகின்றனர்.”