பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

தவத்திரு அடிகளார்



64. “சாதாரணமான கோப்புகளையே குறித்த காலத்தில்-பயனுடைய வகையில் இயக்காதவர்கள் நிதி தொடர்பான அலுவல்களில் அவசரம், கட்டாயம் முதலியவற்றைக் காட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது?”

65. “ஒரு காசில் முடியக்கூடிய வேலைக்கு இரண்டு காசு செலவழிப்பதும் ஊதாரித்தனமே!”

66. “பொதுமக்களிடத்தில் எளிதாகத் தலைவராக விரும்புகிறவர்கள் கிளர்ச்சிகளை விரும்புகின்றனர். இவர்களுக்குக் காரிய சாதனை நோக்கமன்று. தங்களால் காரியம் நடந்ததாக இருக்கவேண்டும் என்பதே இவர்களின் ஆசை”.

67. “திட்டமிட்டுச் செய்யாத பணிகளில் பணமும் பாழாகிறது. பயனும் இல்லாமல் போகிறது”.

68. “இன்றைய சாதாரண மக்கள் அரசினிடம் எல்லாவற்றையும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அரசுக்கு உதவியாக இருக்க விரும்புவதில்லை”.

69. “தம்மிடம் அசாதாரணமான திறமையிருக்கிறது என்று கூறுபவர்கள், கடமைகளைச் செய்து ஒத்துழைக்க விரும்பாதவர்கள் என்பதே உண்மை”.

70. “விநாடிகளைக் கணக்கிட்டு வேலைகளைச் செய்து முடிக்காதவர்கள் வேலைகளைப் பாக்கி போடுவர்”.

71. “காரணங்கள் சொல்ல முடியாத தவறுகள் தவறுகள் அல்ல. இது கடமைகளைச் செய்யும் விருப்ப மின்மையேயாம்”.