பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

தவத்திரு அடிகளார்



97. “பணத்தாசை-பிழைப்பு நோக்கத்தோடு தன்னை அண்டியிருப்பவர்களை நம்பி காரியங்களை ஒப்படைக்காதே! காரியங்கள் கெட்டுவிடும்!”

98. “ஒரு காரியத்தைத் தொடர்ந்து குறித்த காலத்தில் குறித்த முறைப்படி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முயல்கிறவர்களுக்குத்தான் திருத்தொண்டர்களின் அருமை தெரியும்”.

99. “மாறுபாடுகள் - முரண்பாடுகள் பகைமையாக உருவெடுக்க அனுமதிப்பது நாகரிகமன்று”.

100. “மாறுபாடுகள் - முரண்பாடுகள் பகைமையாக உருப்பெற்றுவிட அனுமதித்து விட்டால் என்றுமே மாறுபாடுகள் நீங்கி ஒருமைப்பாடு தோன்றாது; உறவுகளும் கால் கொள்ளா”.

101. “இராமன், இராவணனிடத்தில் காட்டிய பண்பாட்டையும் தருமன், துரியோதனனிடத்தில் காட்டிய பண்பாட்டையும் இன்றைய சமுதாய வாழ்க்கையில் காண முடியவில்லையே!”

102. “தண்ணிரில் மிதந்து செல்வது தெப்பம் தண்ணிரின்மையால் நிலத்தொடு தொடர்பு கொண்டு நிற்கும் நிலைத் தெப்பம் என்று கூறினாலும் அது தெப்பமாகாது. அதுபோலத்தான் சாதி, மொழி, சமய வேறுபாடுகளால் பிணக்குண்டு வாழும் சமுதாயத்தில் ‘தேசியம்’ என்பது”.

103. “கவிஞனுக்குப் பெருமை அவன் தன் மாணாக்கனாலேயே என்பதற்கு கம்பன் பெருமை எடுத்துக்காட்டு”.

104. “துறவு” என்பது எல்லோருக்கும் உரியது. துறவின் வழிதுய்த்தல் நிகழும் பொழுதுதான் துய்த்தல் இன்ப மயமாகிறது”.