பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

15



105. “சமூக வாழ்க்கையின் சுதந்திரம் என்பது கட்டுப்பாடுகளுக்குட்பட்டதே!”

106. “அரைகுறைகள் மற்றவர்கள் சொல்வதை மதித்துக் கேட்கமாட்டார்கள்”.

107. “உரிமைகள் உறவின் அடிப்படையில் தோன்றும் பொழுது அருவெறுப்பைத் தருவதில்லை”.

108. “ஊராட்சி மன்றத்தின் நிதிகள் ‘ஊர்’ என்ற பெயரில் கொள்ளையடிக்கப்படுகின்றன”.

109. “வலிமையற்றோர் அனைவரும் சாதி உணர்வுகளிலிருந்து விடுதலை பெற்று ஓரணியாகத் திரளும்போதுதான் நேர்மை தவறிய வல்லாளர்களாகிய மேட்டுக் குடியினரைத் திருத்தி ஆள முடியும்”.

110. “பெரும்பாலும் பழக்கங்கள் என்பன முன்னேற்றத்திற்குத் தடையாய் அமைவனவேயாம்”.

111. “சிதம்பரம் திருச்சபையில் திருமுறை ஒதும் மரபல்லவாம். ஒதக்கூடாதாம். ஆனால் மனிதரைப் புகழ்தல், மாலை சூட்டல், காசுகள் பெறுதல் ஆகிய எல்லாம் சபையில் செய்யலாமாம். இது ஒரு வினோதமான மரபு”.

112. “ஒரு சிலராவது உன்னுடைய கொள்கைகளுக்கு உடன்பட்டு ஆவேசமுடையவராக ஒத்துழைத்தால்தான் எண்ணங்கள் நிறைவேறும்”.

113. “காதல் மனைவி கிடைப்பதிலும் அருமை, நல்ல தோழர் கிடைப்பது”.

114. “காஞ்சிபுத்தில் இந்திய சமயக் கலைல விழாவாம். இந்து சமயத்திலிருந்து இந்திய சமயத்திற்கு மாறியுள்ளார்? ஏன்? ‘இந்து’ பெயர் வெறுப்பாளர்களுக்கு இஃது ஒரு வெற்றி!”