பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

தவத்திரு அடிகளார்



131. “கீழே விழுந்து விடுவது ஒரு பெரிய குற்றமல்ல; விமுந்த வேகத்திற்கு எழுந்திருக்க வேண்டாமா?”

132. “நன்றாக நடந்த தொழிற்சாலையைப் பொறுப்பில்லாமல் நடத்தி, மூடியவர்கள்-அதைப் பற்றிக் கவலைப் படாமலோ-வெட்கப் படாமல் இருந்தாலோ என்ன செய்வது?”

133. “பெருமை சிறுமை பற்றிக் கவலைப்படுகிறவர்கள் ஏன் பொறுப்புகளைப் பற்றி கவலைப்படுவதில்லை”.

134. “ஒரு குற்றம் அல்லது ஒரு குறை விமர்சனம் செய்யப் பெறுவதற்குக் காரணம் வெறுப்பு என்று எடுத்துக் கொண்டால் குறைகளினின்று விடுதலை பெறும் முனைப்புத் தோன்றாது”.

135. “பங்குனி-சித்திரை கோடையில் உச்சி வேளையில் காலில் செருப்பு இல்லாமல் மண் அள்ளும் வேலை மிகவும் இரங்கத்தக்க நிலை”.

136. “காலத்தை நிறுத்த முயன்றால் பலர் தமது சோம்பலுக்குத் துணையாகக் காலத்தையும் நிறுத்திவிடுவர்”.

137. “தமிழினம் தம்முள் முரண்பட்டு நிற்றல் மரபுவழி வரும் குறை”.

138. “அவையத்து முந்தியிருத்தல்” என்ற வளளுவம் தமிழர் வாழ்வில் இடம் பெற்றுவிட்டது. ஆனால் வள்ளுவத்திற்கு முரணான காரியம் நடை பெறுகிறது”.

139. “பாசம் மிகுந்தாலும் தொல்லைகள் வரும்”.