பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

தவத்திரு அடிகளார்


“களை சாதாரணமாகக் கருதி விளையாட மாட்டார்கள்”.

146. “சுழன்றடிக்கும் காற்று இல்லாதபொழுது சிறிய அளவு சூடம் கூட எரியும். காற்று வேகமாக அடிக்கும் பொழுது எரியக் கூடிய அளவு சூடம் இருந்தாலும் அணைந்துவிடுகிறது! அதுபோல நெருக்கடிகளும் துன்பங்களும் இல்லாதபோது வேலையின் அளவும் தரமும் குறைந்தாலும் ஆபத்து வந்துவிடாது. ஆனால் நெருக்கடி நிறைந்துள்ள போழ்தில் கடுமையாக உழைத்தாலே மீளமுடியும்”.

147. “இறைவன் சந்நிதியில் எரியும் கற்பூரத்தைக் கொளுத்துவதன் பொருள் என்ன? ஞான நெருப்பை மூட்டு; எரிந்து கொண்டிருக்கக்கூடிய செயல் ஊக்கத்தியை மூட்டு என்பதன் விளக்கமேயாம்”.

148. “இறைவா! நீ கருணையால் அளித்த வாய்ப்புக்களை நான் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. முயன்றும் முடியவில்லை. ஆனால் ஆசை மட்டும் குறையவில்லை. திரும்பத் திரும்ப உன்னுடைய கருணையை, அருள் பாலித்தலை வேண்ட வந்து நிற்கின்றேன்! மன்னித்துக் கொள்: அருள் பாலித்திடுக”.

149. “மனிதன் தான் படைத்த பணத்தின் முன் ஏன் இப்படி சேவகம் செய்கிறான்? விநோதமான வாழ்க்கை”.

150. “தலைவனைத் தலைவன் என்று மக்கள் அறியவேண்டும், தலைவனுக்குத், தான் தலைவன் என்ற உணர்வு இருக்கக்கூடாது”.