பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

27


தான் புகழ் வேட்டையை நாடும் என்னை தடுத்து நிறுத்த முடியும் என்று நம்புகிறாய்!

மற்றவர் ஏச்சின் மூலம்தான் மானம், அவமான உணர்ச்சி அறும் என்பது நின் திருவுள்ளம்! எல்லோரும் ஏசட்டும்! ஆனால் இறைவா, நீ ஏச மாட்டாயே! வாழ்த்தியருள்க!”

194. “நீ நம்பினால் போதாது! அவர்களும் வளர வேண்டுமே! இருபாலும் ஒத்த வளர்ச்சியில்லை யானால் எந்த விருப்பமும் விலை போகாது! பயன் தராது.”

195. “ஒரு இயல்பான கதவு அடைபடுவதின் மூலமே ஒழுக்கக் கேடுகள் தோன்றுகின்றன!”

196. “இறைவா! பற்றுக் கூடாது என்று சொல்கின்றனர். உன்னிடத்திலும் பற்றுக் கூடாதா? உன்னிடம் பற்று இல்லாமல் நான் எப்படி வாழமுடியும்? இல்லை, இல்லை. இறைவா! உன் மீது பற்றுக் கொள்ளலாம். எனக்கு தீமை இல்லை! நன்மையேயாம்! ஆனால் இறைவா! உனக்குத் தொல்லைதான்.”

197. “ஆதாயம் கருதித் தவறு செய்பவர்கள் இருக்கிறார்கள்! சிலர் எந்தவிதமான ஆதாயமும் இன்றித் தவறு செய்வார்கள். இந்த விநோதம் ஏன்? நன்மையில், ஒழுங்கில், ஒழுக்கத்தில் விதிமுறைகளில் ஊன்றிய கவனம் இன்மையேயாம்.”

198. “இறைவா! மூடர்களையும் படைத்துப் புத்திசாலிகளையும் படைத்து வேடிக்கை பார்க்கிறாய்! மூடர்களுடன் பேசவே முடியவில்லையே பேசுபவர்களை முட்டாளாக்கி விடுகிறார்களே!