பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

தவத்திரு அடிகளார்



232. “மனிதனின் மேல்நிலைக் கருவியே மனம். இது மிகவும் சாதாரணமானது. மனத்தைக் கடந்ததாக உள்ள புத்தி, சித்தம் என்ற கருவிகள் வரையில் செய்திகளைக் கொண்டு செல்லும் ஆற்றல் தேவை. அப்போதுதான் குற்றங்கள் குறையும். வெற்றிகளையும் பயன்களையும் அடையலாம்”.

233. “இந்தியச் சமூகத்தில் சாதியே எல்லாம். அறிவுக்குக்கூட மதிப்பில்லை. நாலு செய்தி நன்றாகத் தெரியாதவர்கள் கூட பார்ப்பனராக இருந்தால் ‘ஜகத்குரு'வாகி விடலாம்”.

234. “இன்னும் பார்ப்பனர்கள் பெயரளவில்தான் தமிழர்கள். கள்ளிக் கோட்டையில் வாழும் பார்ப்பனர்கள் மலையாளிகளுடனேயே இணைந்து வாழ்கின்றனர். தமிழர்களுடன் அல்ல. இது அவர்கள் இயக்கமாம்”.

235. “தவறுகளைக் கூட ஏற்கலாம். ஆனால் முறைகேடுகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது.”

236. “வாழ்க்கை இன்பத்திலோ, துன்பத்திலோ தேங்கி நின்று விடுதல் கூடாது. பகலும் இரவும் ஒன்றையொன்று விரட்டிக்கொண்டு முந்துவது போல வாழ்க்கை ஒடிக் கொண்டே இருக்கவேண்டும்.

237. “வேலையைத் தேடுதல்-எடுத்துச் செய்தல் என்ற ஆர்வம் இல்லாதவர்களும் சோம்பேறிகளே!”

238. ‘சுகம்’-அனுபவிக்கும் எண்ணம் வந்து விட்டாலே உழைப்பு ஒழுக்கம் எல்லாம் பறந்து போய்விடும்.”

239. “பேய் உண்டோ, இல்லையோ சோம்பேறிக்கு உள்ள சுயநலம் பேயேயாம்.”