பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

33



240. “நல்லதாக இருந்தால் மட்டுமே மக்கள் ஏற்பார்கள் என்பதல்ல. அந்த நல்லது அவர்களுக்கு எப்படிப் பயன்படுகிறது என்பதையும் பொறுத்ததே யாம்.”

241. “நல்லனவற்றைப் பழக்கங்களாகவும் வழக்கங்களாகவும் மாற்றியமைத்தல் கடமை”.

242. “உடலை வருத்திக் கொள்ளும் அளவுக்கு உறுதி இல்லையானால் முறையாகக் கடமைகளைச் செய்ய இயலாது.”

243. “எந்த ஒரு செயலையும் நோன்புபோல் பிடிவாதமாக எடுத்துக்கொண்டு செய்யும் மனப்போக்கு இருந்தால்தான் கடமைகளைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்.”

244. “ஒரு மூச்சு கொள்முதல், ஒரு மூச்சு விடுதல் இதைப் போல் வாழ்க்கையில் எந்த ஒரு செயலிலும் கொள்முதலும் விடுதலும் இருக்கவேண்டும்.”

245. “காரியங்கள் நடைபெற வேண்டுமானால் உளப்பூர்வமான முயற்சி தேவை”.

246. “வேலை செய்வோரெல்லாம் முயற்சியுடையோர் அல்ல. முயற்சி என்பது தடைகளையும் இன்பங்களையும் பாராது, மூச்சடக்கி கருமமே கண்ணாகச் செயற்படுதலாகும்.”

247. “முயற்சி என்பது ஏற்றி வைத்த சுமையுடன் ஒரு மேட்டு நிலத்தில் ஏறும் எருதுகள் மூச்சடக்கி முழங்காலிட்டு முன்னேறுதலைப் போன்றது.”

248. “மனித முயற்சிகள் தோற்கலாம். ஆனால், மனிதன், தோற்கக் கூடாது.”

த-3