பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

தவத்திரு அடிகளார்



266. யூகத்தின் அடிப்படையில் மற்றவர் மீது பழி பாவங்களைச் சுமத்துவதற்கு முட்டாள்கூட முயற்சிக்கிறான்.”

267. “உடற்பயிற்சி வேலையாக மாறும் நாளே உண்மையாக வாழத் தொடங்கும் நாள்.”

268. சஞ்சித வினை; ஒழுக்கமின்மை; பிராரத்துவ வினை; ஆர்வமின்மை; ஆகாமிய வினை; வறுமை.”

269. ஒரு நாள் கடனாளியாக வாழத்தலைப் பட்டுவிட்டால் எப்போதும் கடனாளிதான்.

270. “பர்லாங்கு கற்களில் ஊர் பெயர் இருப்பதில்லை. ஆனால், மைல் கல்லில் ஊர்ப்பெயர் இருக்கும். அதுபோல, விநாடியில் செய்த வேலைகளில் வேண்டுமானால் பயன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாள் முழுதும் செய்த வேலையில் பயன்பாடு தெரியவேண்டும். அப்படி பயன்பாடு கட்புலனுக்கு வராதுபோனால் வேலை செய்ததாக கருத முடியாது.”

271. “ஒரு வேலையை எண்ணியபடி பயனுடையதாகச் செய்து முடிப்பதற்கே வேலை என்று பெயர்.”

272. “கால இழப்பு, பொருள் இழப்பு, மானிட இழப்பு ஆகியவைகளைப் பற்றிக் கவலைப்படாமல் வழக்கம்போல உண்டு உடுத்து வாழ்கிறவன் உபயோகப்படமாட்டான்.”

273. “விதிகளைப் பின்பற்றினாலே பல சிக்கல்களைத் தவிர்த்துவிடலாம்.”

274. “காதலின்பம் என்பது கடவுள் நெறிக்கு மாறானதல்ல.”

275. “அன்று மணிமேகலை தொடங்கிய பசி நீக்கப்பணி, இன்னமும் நிறைவேறவில்லை.”