பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

தவத்திரு அடிகளார்



305. “இப்போதுள்ள முறையில் இல்லற வாழ்க்கையின் மூலம் பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள்”.

306. “காதல் வளர்ந்தால்தான் இன்பம் தரும். காதல், திருமணத்தில் முற்றுப்பெறுவதையே பலர் வாழ்க்கையில் பார்க்கிறோம்”.

307. “கோப்புகள் நினைவுக்குரிய சாதனமே தவிர, பணிகளை நிறைவேற்றக்கூடிய சாதனமல்ல”.

308. “வளர்ச்சிப் பெறாத மக்களிடம் நன்றியை-கடப்பாட்டை எதிர்பார்ப்பது தவறு; கிடைக்காது”.

309. “விளம்பர வெளிச்சம்” விபசாரத்தைத் தவிர வேறென்ன?”

310. “தொழிலுக்குத் தகுந்த நபர்களும் கிடைப்பதில்லை: நபர்களுக்குத் தகுந்த வேலை தேடுவதும் தொல்லையே!”

311. “ஒரு பெண் தான் சம்பாதிக்கும் பணத்தில் கூட, தன் தாய்க்கு அனுப்பக் கணவன் சம்மதிப்ப தில்லை. இதுதான் இந்திய ஆடவர்களின் சர்வாதிகாரம்”.

312. “சுற்றத்தை மீறிக் காதல் செய்யும் துணிவுள்ள பெண்கூட மிருகத்தனமான கணவன் முன்னே கோழையாகி விடுகிறாள்”.

313. “நாளை எண்ணிச் சம்பளம் கொடுக்கும், வாங்கும் பழக்கம் உள்ள வரை வேலை செய்ய விருப்பம் வராது”.

314. “உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் என்பதே மனிதனை வளர்க்கும் நெறி”.

315. “பெட்டியில் வைக்காமல் எடுக்க முயற்சிப்பவர்கள் மூளைக் கோளாறு உள்ளவர்கள்”.