பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

தவத்திரு அடிகளார்



326. “உழைக்காமல் வாழ நினைப்போர் வேலை தேடுகின்றனர். உழைத்து வாழ விரும்புவோர் வேலைகளை எடுத்துக் கொள்கின்றனர்”.

327. “அரசுகளுக்கிடையில்கூட விளம்பர ஆசையில் ஒரு அரசின் பணியைப் பிறிதொரு அரசு மறைக்கிறது”.

328. “மேலாண்மை என்பது தரம் குறைந்த விமர்சனம் அல்ல. பணிகளை உடனிருந்து செய்வித்தல்”.

329. “ஒருமணி நேரம் சொற்பொழிவு நிகழ்த்த, பல மணி நேரம் படிக்கவேண்டும்”.

330. “அரசியல் ஒரு இயக்கம்; அரசாங்கம் ஒரு - நிறுவனம்”.

331. “ஒவ்வொரு நாளும் நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் என்னியத்தில் பாதிப்பை உண்டாக்குகின்றன”.

332. “தனக்குரியதை விட்டுக் கொடுக்காமல், மற்றவர்களிடம் தியாகத்தை எதிர்பார்ப்பது முட்டாள் தனம்”.

333. “தமிழக அரசியலுக்குத் திரைப்படம் காரணம் அல்ல; வேறு சில காரணங்களும் உண்டு”.

334. “இன்றைய உலகை தீமைகளே அலங்கரிக்கின்றன. தீமை என்ற பெயரில் அல்ல-நன்மை என்ற போர்வையில்”.

335. “இயற்கை மனிதனின் கழிவையே உணவாக ஏற்றுக் கொள்கிறது. இதைக்கூட மனிதன் முறையாக இயற்கைக்குத் தர முன்வருவதில்லை”.