பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

தவத்திரு அடிகளார்



348. “எந்த ஒரு செயலுக்கும் பயன் என்ன என்று அளந்தறிதல் ஒழுக்கத்தினை வளர்க்கும். உழைப்பின் திறனை வளர்க்கும்.”

349. “இயற்கையும் விலங்குகளும் விவகாரமான மனம் இன்மையால் செயற்பாடுகளில் ஒழுங்கும் பயனும் மாறா நிலையினவாக உள்ளன.”

350. “மனிதனின் மனம் விவகாரத் தன்மையுடையதாக இருப்பதால் ஒழுங்கு, ஒழுங்கின்மை, பயன், பயனற்ற நிலை என்று கலந்துள்ளன. ஆனாலும் வளர்ச்சியிருக்கும்.”

351. “மனிதன் தீமையிலிருந்து விடுபட்டு ஒரு நிலையில் ஒழுங்கமைக்கப் பெற்ற உழைப்போடு கூடிய வாழ்க்கையை அமைத்துக் கொள்வானாயின் எதையும் வெற்றி பெறலாம். “இன்பமே எந்நாளும் துன்பமில்லை” என்று வாழலாம்.”

352. “ஐம்பூதங்களிலும் (நிலம், நீர், தீ, வளி, வான்) தண்ணிர் கண்ணுக்கும் கருத்துக்கும் குளிர்ச்சியைத் தருகிறது.”

353. “ஐம்பூதங்களின் ஒருங்கிணைந்த-ஒத்திசைந்த செயற்பாட்டிலேயே உயிரியல் இயங்குகிறது.”

354. “ஒன்றுமே இல்லாதிருப்பர். ஆனால், ஒன்று கிடைத்தவுடன் மன அமைதி பெறார். பிறிதொன்றை அவாவுவர். இது மனித இயற்கை.”

355. “நிர்வாகம், பொருள் பொதிந்த சொல்; உயிர், உடலை நிர்வாகம் செய்கிறது. ஆனால் இந்த நிர்வாகத்தையும் நடைபெற வொட்டாமல் கிளர்ச்சி செய்ததடை செய்த குற்றவாளிகள் மருத்துவமனைக்கு தண்டனை கொடுத்து அனுப்பப்படுகிறார்கள்,