பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

தவத்திரு அடிகளார்



389. “இனிப்புச்சுவை - சர்க்கரை சுவையாகவும் இருக்கிறது; அதுவே சுமையாகவும் மாறிவிடுகிறது.”

390. “விலங்குகளுக்கு அவைகளின் பசியே தெரியும். தன்பசி நீங்கிய விலங்குகள் மற்றவைகளின் பசியைப் பற்றி கவலைப்படுவதில்லை. இதுபோலவே மனிதர்களிலும் பலர் வாழ்கிறார்கள்.”

391. “சிறப்புக்கும், பொருள் வளர்ச்சிக்கும் தொழில் காரணமல்ல. தொழிலைச் செய்வோரின் திறமையே காரணம்.”

392. “பெரிய மரத்தையும் மரத்தின் சுற்றுப் புறங்களை ஆழப்படுத்துவதன் மூலம் வீழ்த்திவிடலாம். அதுபோல் சமூகத்தின் எந்தத் தீமையையும் சுற்றுப் புறத்தை - சூழலைச் சரிப்படுத்துவதன் மூலம் அகற்றி விடலாம்.”

393. “சுகம்” என்பது வளத்தில் மட்டுமல்ல. வறுமையிலும் சுகம் அனுபவிப்பவர் உண்டு. இதற்கும் காரணம் உடற்சோம்பல்.”

394. “கணவனின் அரசியலுக்கு மனைவி மக்களைத் துன்புறுத்துவது கயமைத்தனம்.”

395. “எதிர்க் கருத்துடையவர்களை நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஆத்திரத்துடன் பகைத்து அணுகுவது ஜனநாயக மரபன்று.

396. “கால்நடை எளிமை, காரில் செல்வது ஆடம்பரம் என்று கருதக் கூடாது. ஆகும் செலவின் அளவையும் பயனையும் கணக்கிட்டு நோக்கினால் இன்று சில கால்நடைகளுக்கு, காரில் செல்வதை விடச் செலவு கூடுதல்.