பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

49



397. “அரசியல் இன்னாருக்குத்தான் என்று வரை யறை செய்வது மக்களாட்சி.”

398. “விரோதிகளை விட வஞ்சகர்கள் மோசமானவர்கள்.”

399. “உலகின் சிறு சிறு நிகழ்வுகள் கூட திட்டமிட்டே நிகழ்கின்றன. ஆனால் மனிதன் திட்டமிட மறுக்கிறான்.”

400. “திட்டமிடாத வாழ்வு, காட்டாற்று வெள்ளம் போன்றது.”

401. “செலவுக்குப் பணம் என்ற மனப்போக்கு நிறைநல வாழ்க்கைக்குத் துணை செய்யாது. ஆக்கம் தேடுதல் வாழ்க்கையின் கடமைகளுள் ஒன்று.”

402. “பசிக்குச் சோறும் படுப்பதற்கு இடமும் அணைப்பதற்கு ஆயிழையும் கிடைத்தால் போதும் என்று முயற்சிப்பவர்கள் பிச்சைக்காரர்களே.”

403. “காலத்தையும் கடமையையும் இணைத்துப் பார்த்தால்தான் கடமைகளின் அளவும் தரமும் கூடும்.”

404. “வாழ்வாங்கு வாழ விரும்புபவர்கள் ஒயாது ஒழியாது கடமைகள் செய்தாலும் போதா மனமே பெறுவர். சோம்பேறிகள் செய்த சில காரியங்களையே பெரிதாக்கி மனத் திருப்தியடைவர்.”

405. “பதவியைப் போல மனிதனைக் கெடுப்பது வேறு ஒன்றும் இல்லை,”

406. “சிலர் தாம் பெற்ற பதவிகள் காரணமாகவே நிறைய பேசுகின்றனர். ஏராளமான அறிவுரைகளை உபதேசங்களை அள்ளித் தருகின்றனர். மக்களும்

த-4