பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

தவத்திரு அடிகளார்



478. “தாழ்வு மனப்பான்மை முன்னேற்றத்தின் எதிரி.”

479. “தன்னிச்சைப் போக்கு, சர்வாதிகாரத்திற்கு முன்னோடி.”

480. “நான் நேற்றுச்செய்ததை இன்று அனுபவிக்கிறேன். இஃது உலகியல் நியதி.”

481. “விஞ்ஞானம் துன்பத்தை நீக்குவது, மெய்ஞ் ஞானம் நிலைத்த உண்மையான அறிவு.”

482. “சலுகைகள் தொடக்கத்தில் பயன்தரும்; சலுகைகள் தொடருமானால் சண்டித்தனத்தையே பயக்கும்.”

483. “பலருக்குத் தனிமை, திணிந்த இருளை விடக் கேடு செய்யும். ஆனால், சிலருக்குத் தனிமை ஒளி பொருந்திய துழ்நிலையை வழங்கும்.”

484. “கூட்ஸ் வண்டியில் உள்ள பெட்டிகள்: இணைப்பும் உடையன. தனித்தனியேயும் உள்ளன.”

485. “இருளுடன் ஒளி, தொடர்பு கொண்டே நீக்குகிறது! அதுபோலத் தீமையை அகற்றுவதிலும் கூட எதிர்மறை முயற்சிகளை விட உடன்பாட்டு முயற்சிகளே பயனுடையன.”

486. “தண்ணீர் ஓட்டமில்லாமல் நின்றால் பாசி பிடிக்கிறது. அதுபோல வாழ்க்கையில் எந்த இடத்திலாவது இயக்கமின்றி நின்றுவிட்டால் தனிமனிதனும் கெட்டுப்போவான்! சமுதாயமும் கெடும்.”

487. “புதிய நீர் ஊற்று வராத கிணற்றின் தண்ணிர் தூய்மையற்றது. அதுபோலவே புதியக் கருத்துக்களை ஏற்காத பழமைவாதிகளும் தூய்மை யுடையோராய் இருத்தல் அரிது”. (இங்குத் தூய்மை என்பது, மனிதகுலத்தின் மாற்றத்தில் ஈடுபாடு.)