பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

தவத்திரு அடிகளார்



525. “துறத்தல் என்பது பெண்ணை மட்டுமல்ல; ஆணவத்தைக் கூர்மைப்படுத்தி வளர்க்கும் அனைத்தையும் துறத்தலே துறவு.”

526. “வாழ்விலேயே இயல்பாக “நான்” “எனது” என்ற முனைப்புக்கள் அற்று வாழ்தலே துறவு.”

527. “இன்று நாட்டில் துறவிகள் இல்லை. ஆசையில் எல்லாம் மோசமான ஆசை “தனிமுடி கவித்து அரசாள்வது”-இந்த ஆசைக்கு அடிமையானவர்களே இன்றைய துறவிகள்; மடாதிபதிகள்.”

528. "சமயம், தத்துவமாக இருந்தவரையில் விபத்தில்லை. அது என்று நிறுவனமாக அமைந்ததோ அன்றே அது மனிதக் குலத்திற்குக் கெடுதல் செய்யத் தொடங்கிவிட்டது.”

529. “ஜனநாயக அரசுகள் கூட்டத்தையும் கூக் குரலையும் கண்டு அஞ்சுகின்றன.”

530. “நம்முடைய அரசுகள் மக்களுக்குத் தேவையானதைச் செய்வதற்குப் பதிலாக மக்கள் ஆசைப் படுவதையே செய்கின்றன.”

531. “திட்ட முதலீட்டுச் செலவுகளுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படும் வகையில் அரசுகள் ஊதாரித் தனமாக இருக்கக்கூடாது.”

532. “கோழைக்கு தைரியசாலி என்றும், முட்டாளுக்குத் தான் அறிஞன் என்ற எண்ணமும் வந்து விட்டால் அவனைத் திருத்த இயலாது.”

533. “சமயங்கள் மாறுபடா சமயவாதிகள் மாறுபடுவர்.”

534. “திருக்குறளைச் சமயச் சார்பான நூல் என்று கூறுவதற்கு வாய்ப்புக்கள் இருந்தாலும்