பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

67



554. “ஐ.நா.சபையில் பேசுவதே ஒரு அனுபவம். குற்றம் சாட்டப்படாத நாடுகளே இல்லை. ஆனால், நாகரிகப் பொலிவு இருக்கும்.”

555. “நான்கு திசையறிவும் கலக்கும் பொழுதே மனிதன் பூரணத்துவம் அடைகின்றான்.”

556. “கலை, கலைக்காக அல்ல; வாழ்க்கைக்காக.”

557. “உறவுகளைப் பராமரித்தல் ஒரு கடமை. இதைச் சரியாகச் செய்யாமையே பல இழப்புகளுக்குக் காரணம்.”

558. “காலதாமதமாக நிகழ்ச்சிகளுக்குப் போதல் தவறுமட்டுமல்ல, வெட்கப்படவேண்டிய ஒன்று.”

559. “செய்யவேண்டியவைகளை வரையறை செய்து கொள்ளாவிட்டால், செயல் பயன்தராது.”

560. “விவகாரப் புத்தியுடையவர்கள் தவறுகளுக்கு வருந்தமாட்டார்கள். சட்டங்களும் நியாயங்களும் பேசுவார்கள்.”

561. “முழுமையாக அனுபவிக்கப்படாதவை எல்லாம் மேலும் மேலும் ஆசைகளை வளர்த்து அலைக்கழிக்கும்.”

562. “வைத்தியர் ஆலோசனை நல்லதே. ஆனால் பின்பற்ற ஆரம்பித்தால் மனம், உடல் பக்கமே வேலை செய்யும்.”

563. “உடலுக்கு பயன்படாத கழிவுப் பொருள்களும்கூட நிறுவனத்திற்குத் தேவையே!”

564. “சுவையுள்ளன உடலுக்கு நலம் தருவதில்லை. அதுபோல, ஆசைகளுக்கு உகந்தனவும் மகிழ்ச்சியைத் தரா.”