பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

தவத்திரு அடிகளார்



565. “புதிய தடம் காண்பது எளிதன்று. ஆனால் காண்பதில்தான் மனிதனின் வெற்றி இருக்கிறது.”

566. “வாழ்க்கையை வென்றவர்களுக்கே தனிமை நல்லது. வாழ்க்கையில் வெற்றி பெறாதவர்களுக்கு தனிமை கேடே செய்யும்.”

567. பலருக்குத் தனிமை இருளை விடக் கேடு செய்யும். சிலருக்கோ ஒளி பொருந்திய சூழ்நிலையை வழங்கும். “இஃது அவரவர் வாழ்நிலையைச் சார்ந்தது.”

568. “வாழ்க்கையை வென்றவர்களுக்கு ஒய்வு பயன்தரும். மற்றவர்களுக்கு ஒய்வும் ஒரு உபத்திரவமே.”

569. “மற்றவர்களிடமிருந்து பெருமையால் உயர்ந்து விடுவதும் உபத்திரவமே. ஏனெனில்செய்யும் தவறுகளைக் கூட சுட்டிக் காட்ட ஆட்கள் கிடைக்க மாட்டார்கள்.”

570. “நோய் நீக்கக் கூடியதே. ஆனால் நோய் நீக்கத்திற்கு முயற்சியில்லாமல் படுக்கையில் கிடப்பவர் சோம்பலை விரும்புகிறார்கள் என்பது பொருள்”.

571. “மக்களுக்கு ஆரவாரத்தில் ‘உள்ள விருப்பம் அமைதியில் இல்லை.”

572. “மக்களுக்குத் திருவிழாக்களில் உள்ள ஈடுபாடு வழிபாட்டில் இல்லை.”

573. “ஏழைகள், தன்னம்பிக்கையை இழந்து செல்வத்தை நம்புவார்கள்.”

574. “ஆபத்துக் காலத்திற்குக் கூட அரசுகள் ஏழைகளைப் பொறுத்தவரையில் கடினமாகத்தான் இருக்கின்றன.”