பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

69



575. “மனிதனை வளர்க்காத எந்தச் செயல் முறையும் பயன்தருவன அல்ல.”

576. “தர்மம்-அறம் முதலியன நிலவுடைமைச் சமுதாயத்தின் பயனற்ற சொற்கள்.”

577. “ஒரு மனிதன் பிறிதொரு மனிதனுக்கு இயல்பிலேயே கடமைப்பட்டிருக்கின்றான் என்பதே உயர்வுள்ள சமயக் கருத்து.”

578. “பயத்திற்குக் கடவுளும், அன்புக்கு மனித குலமும்.”

579. “குறித்த கால எல்லையில் கடமைகளை முடித்துவிடுவது பலவகையில் நன்மை. காலத்தால் பண்டங்கள் மட்டும் கெடுவதில்லை. மனிதர்களும் கெடுவார்கள்.”

580. “மக்களாட்சியின் சின்னம் தேர்தல் மட்டு மல்ல. அரசின் செயற்பாடுகளில் மக்கள் தாமே வலிய மேற்கொள்வதுமாகும்.

581. “மக்களுக்கும் அரசுக்கும் உள்ள இடைவெளி குறைந்தாலே நல்லாட்சி அமையும்.”

582. “மக்களுக்காக அரசு அமைந்திருக்கிறது. அரசின் செயற்பாடுகள் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே என்ற உணர்வும் மக்களிடத்தில் வளராது போனால் மக்களாட்சி முறை வெற்றி பெறாது.”

583. “படித்த பெண்களிடத்திலும் பயம் தெளியவில்லை.”

584. “வெற்றி பொருந்தியவாறு வாழ்ந்து முடிக்காது போனாலும் மற்றவர்கள் தயவில் கடைசிப் பயணத்திற்குக் கொட்டு முழக்கு கிடைக்கும்.”