பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

தவத்திரு அடிகளார்



585. “தொடர்ச்சியான செயற்பாடே காரிய சாதனை”.

586. “காலத்தின் அருமைக்கேற்ப செயற்படுதலே முதற்பணி. அதற்குபின்தான் வசதிகள்!”

587. “இன்பக் காதல் வாழ்க்கை உடலுறவில் மட்டும்தான் இருக்கிறது என்ற அறியாமை உள்ள வரையில், குடும்ப நலத்திட்டம் நிறைவேறாது.”

588. “ஆண் வர்க்கத்தின் எடுப்பான சமூகப் பின்னணி கொஞ்சம்கூடக் குறையவில்லை. அதனால் பெண்களுக்கும் விடுதலை கிடைக்கவில்லை.”

589. “எதையும் நெறிமுறைப்படுத்தி இயக்கக் கூடிய இறைமைத் தன்மை உடைய அரசு, முறையானதாகவும் வலிமை உடையதாகவும் அமையாவிடில் எதுவும் சரியாக நடக்காது.”

590. “எல்லாப் பிரிவுகளையும் விட, அரசியல் பிரிவு அதிகத் தீமையைத் தரும்.”

591. “எந்த ஒன்றும் அதாவது, பேச்சு, எழுத்து, சமயம்-இவைகள் பிழைப்புக்கு என்ற நிலை வந்து விட்டால் அவை மக்களுக்குப் பயன்படாது.”

592. “இல்லறத்தில் வாழ்வோர் பற்றுக்கள் உடையோர் என்றும், துறவறத்தில் வாழ்வோர் பற்றற்றவர்கள் என்றும் கருதக்கூடாது. தன் சாதியைக் கூட துறக்காத துறவிகள் நமது நாட்டில் உண்டு.”

593. “புரோகித சமயத்தால் மனித உலகத்திற்கு ஒருபோதும் நன்மையில்லை.”

594. “இந்திய நாட்டை அடிமைப்படுத்தியதில் ஆங்கிலேயர்களுக்கு இருந்த பங்கைவிட, இந்திய மதப் புரோகிதர்களுக்குக் கூடுதலான பங்குண்டு."