பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

தவத்திரு அடிகளார்



606. “நோயே படுக்க வைத்துவிடும். சோம்பேறிகளுக்கு நோய் வந்தால் எளிதில் போகாது; நோயும், சோம்பலும் உடன் பங்காளிகள்.”

607. “கடின உழைப்பும் .ெசல்வமும் கூட்டாளிகள்.”

608. “அற்பர்களிடத்தில் அவர்கள் தவிர்க்க முடியாது வேண்டப்படுகிறார்கள் என்ற எண்ணம் வர அனுமதிக்கக்கூடாது. அப்படி வந்துவிட்டால் அவர்கள் பெரிய மனிதர்களாகி விடுவார்கள்.”

609. “அரசுக்கும் மக்களுக்கும் இடையில் இடைவெளி இருத்தல்கூடாது.”

610. “அரசுக்குரிய வரியைக் கொடுப்பதை ஒரு அறவழிப் பணி என்ற எண்ணம் மக்களிடத்தில் உருவாக வேண்டும்.”

611. “ஒழுங்கமைவுகள் இல்லாத எந்தப் பணியும் நிறைவான பயனைத்தராது.”

612. “முறைப்படுத்தப் பெற்ற பணிகள் ஒரு போதும் வெற்றியைத் தராது போவதில்லை.”

613. “தன்னையே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் ஒருபோதும் பயன்படமாட்டார்கள்.”

614. “நட்பு-உறவு என்பதும் நோய் வராமலும் மேலும் வளரத்தக்க வகையிலும் பராமரிக்கப் பெற வேண்டிய ஒன்றே!”

615. “தன்னை வளர்த்துக் கொள்வதே வெற்றி வாய்ப்புக்குரிய ஒரே வழி.”

616. “பிறர் தோளில் நின்று பிடிக்கும் வெற்றிகள் நிலையான பயனைத் தரா.”