பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

தவத்திரு அடிகளார்


தின் அனைத்துறுப்புக்களும் செயற்பட்டாலே நலம் வந்தமையும்.”

627. “மனதில் உறுத்தக் கூடிய எதையும் உரியவர்களிடம் சொல்லித் தீர்வு காண்பதே எதிர் விளைவு களைத் தீர்க்கும்.”

628. “தன்னை வளர்த்துக் கொள்ளாமல் மற்றவர்கள் வாழ்வதில் அழுக்காறு கொள்வது வாழும் நெறியன்று.”

629. “திட்டமிட்ட எந்தச் செயலும் நிறை நலன் தரும்.”

630. “படித்தவர்கள், படிக்காதவர்கள் இவர்களிடையே நாகரிகத்தில் பெரிய வேறுபாடில்லை.”

631. “ஒழுங்குகளை கடைப்பிடித்தலே வெற்றிகள் அனைத்திற்கும் அடிப்படை.”

632. “அவியலில் பல பொருள்கள் கலந்து தம் முள் சுவைகளைப் பரிமாற்றம் செய்துகொண்டு அதே போது தனித்தன்மையையும் இழக்காமல் இருப்பது போல் சமுதாய அமைப்பும் இருக்கவேண்டும்.”

633. “நேருஜி இருந்த இடத்தில் மற்றொரு வரை வைத்துப் பார்க்க இயலவில்லை.”

634. “சடங்குகளினால் விளையும் பயன்கள் யாதொன்றும் இல்லை. ஆனால், உணர்வைத் தூண்ட சடங்குகள் துணை செய்யும்.”

635. “மனிதர்களைத் திருத்தக் கட்டுப்பாடுகளால் இயலாது. மடை மாற்றங்கள் தேவை.”

636. “தொடர்ச்சியான செயற்பாடே பயனுடையது.”