பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

தவத்திரு அடிகளார்



645. “நாதம்-இதயத்தினில் இயங்கும் மெல்லோசை, இதனை சுரப்படுத்துவது நாதசுரம்.”

646. “மணிவிழா இரண்டாவது சுற்றுக்கு ஆயத்தமாவது.”

647. “கண்ணால் பார்க்காத வேலை பயன் தராது.”

648. “இன்றைய இராம - இலக்குவர் வி.ஜி. பன்னிர்தாஸ், சந்தோஷம் சகோதரர்கள்.”

649. “ஆன்மா-உயிரே முதல். இந்த முதலைப் பெருக்கி வளர்க்கவே உடல் முதலிய அனைத்தும்.”

650. “மனிதகுலம் என்ற ஒருமை ஆத்மா. இந்த ஆத்மாவை அனைவரும் வளப்படுத்தவேண்டும்.”

651. “இழிவானது என்று கருதப்படுபவைகளை நாடகங்களில் காட்டக்கூடாது,”

652. “படித்தவர்களின் தவறுகளாலேயே வரலாறு கீழ்மைப்படுகிறது.”

653. “படித்தவர்கள் படிப்பிற்கேற்றவாறு தம்முடைய வாழ்க்கைப் போக்குகளை மாற்றிக் கொள்ளாது போனால் படிப்பினால் பயன் இல்லை.”

654. “தனிமனிதனை உருவாக்குவது அவனுடைய வாழ்காலத்தின் சமுதாய அமைப்பே.”

655. “முன்னேற வேண்டும் என்ற பசித்துடிப்பு இல்லாத சமுதாயம் எவ்வளவு வசதிகள் இருந்தாலும் முன்னேறாது.”

656. “முன்னேற்றத்தின் முதற்படி ஆர்வத் துடிப்பே!”