பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

தவத்திரு அடிகளார்


கவலைப்படுவதாகக் கூறுவதுகூட தன்னை வளர்த்துக் கொள்ளத்தான்!”

668. “வயிறாரச் சாப்பிட விரும்புகிறவர்கள் உடலார உழைக்க முன்வரவேண்டும்.”

669. “உழைக்காமல் உண்பவர்கள், மற்றவர் குருதியைக் குடிப்பவர்கள்.”

670. “காற்று அடிக்கும் திசையில் மரம் சாய்ந்தால் மரம் விழும். காற்றை எதிர்த்து நின்றால் வாழும். அதுபோல் சூழ்நிலைகளைச் சார்ந்தே வாழ்கிறவர்கள் வீழ்ந்துவிடுவார்கள். சூழ்நிலைகளை எதிர்த்து மாற்ற முனைபவர்களே வாழ்வார்கள்.

671. “கவர்ச்சியில் மயக்குபவவை நன்மை செய்தல் அரிது.”

672. “குறிக்கோள் தழிஇய வாழ்க்கை இருந்தாலே திட்டமிடும் மனப்போக்கு தோன்றும்.”

673. திட்டமிடாத செயல்முறைகள் முழுப் பயனைத் தரா.”

674. “செல்வத்தின் ஊற்று நிலமே!”

675. “பிறர் பணத்துக்கு, செலவுக்குத் திட்ட மிடுபவர்கள் எண்ணிக்கை மிகுதி.”

676. “காற்று வீசும்பொழுது தலை தெறிக்கச்சுற்றும் மரங்கள் பலமற்றவை. அதுபோல சோதனைகள் வந்துற்ற பொழுது அலமருகிறவர்கள் பலமற்றவர்கள்.”

677. கழிவுகளும்கூட, பொருளுற்பத்தி சாதனங்களே!”

678. “தன் முனைப்புடையவர்கள் காரியங்களை விட்டுவிடுவர்.”