பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

83



720. சமுதாய மாற்றங்களை, சீர்திருத்தங்கள் மூலமே செய்துவிட முடியாது. சீர்திருத்தம் என்பது புண் நாறாமலிருக்கப் புணுகு பூசுவது போலத்தான்; புண் ஆறாது.”

721. “இந்திய சமூகம், நோய் நிறைந்த சமூகம். எந்த மருந்தாலும் நோய் தீரவே இல்லை. புரட்சியே தேவை.”

722. “ஆதி திராவிடர்களுக்கு என்று தனித் தொகுதி அமைப்பு தவிர்க்கப்பட்டது. இந்தியாவிற்கு நன்மையாயிற்று.

723. “காதல் செய்யும் வாய்ப்பு இருந்தாலே சமூகத்தில் எல்லாத் தீமைகளும் போய்விடும்.”

724. வகுப்பு வாரி உதவித் திட்டங்கள் உள்ள வரை சாதிச் சங்கங்கள் வளரும்.

725. “உத்தரவாதம் வழங்காத அரசு உள்ளவரை எந்த ஒரு ஒழுக்கமும் மக்கள் மன்றத்தில் கால் கொள்ளாது.”

726. படிப்பதனால் மட்டுமே நற்பண்புகள் வந்து விடுவதில்லை. சமூக நிகழ்வுகள் தாம் பண்பாட்டுக்குக் களன்.”

727. “வகுப்பு வாரி உதவித் திட்டங்கள் உள்ள வரை சாதிச் சங்கங்கள் வளரும்.”

728. “சமூகத் தகுதிகளே இன்றுள்ள பிரச்சினை. தீண்டாமையல்ல.”

729. “இந்திய சமூகத்தின் அடிப்படைக் கட்டுமானத்திலேயே தீண்டாமை, சாதி வேற்றுமை முதலிய தீமைகள் படிந்துள்ளன. இந்தத் தீமைகளை புரட்சியின் மூலமே மாற்ற இயலும்.”