உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. காலண்டர் "என்ன ஆரவாரம் கேட்கிறதே! காலையிலிருந்தே ஒரே எக்காளமும், பறையொலியும்! கடை வீதியிலும், கடற் கரையிலும் வாணிபம் குறைந்து விட்டது. விடுமுறை அறிவிக் கப்பட்டுள்ளது. டைபர் நதிக்கரைத் தோட்டங்களில் கூட்டங் கூட்டமாக மக்கள் நிறைந்துள்ளனர்." "கோடையின் கொடும் வெய்யில். காலடி வைத்தால் கொப்பளிக்கும் தரை. தண்ணீர்த்தொட்டியின் அருகே இருக் கும் என்னால்கூட வெப்பம் பொறுக்க முடியவில்லை. இந்த நிலையில் கூட்டம் ஏன் கூடுகிறது?" "வெற்றி வீரர் சீசரே! ரோம் நகர மக்கள் விழாக் கொண்டாடுகிறார்கள்.' "விழாவா? வேடிக்கையாக இருக்கிறது! வெப்பம் மிகுந்த காலம்; நதியில் நீர் வறண்டிருக்குமே! அன்றியும் தோட்டங் களில் வறுமையாளர்போல இலையுதிர்ந்து நிற்கும் மரங் களைத்தான் காணமுடியும். புல் தீய்ந்து, கொடிகள் துவண்டு செடிகள் உருமாறி, மூர்க்கக் குணம்படைத்த வெற்றி வீரர் களால் அழிக்கப்படும் நாட்டைப்போலக் கதிரவனின் வெய்யி லால் கருகியுள்ள தோட்டங்களில், பறவைகள்கூட நுழைய அஞ்சுமே! மனிதர்கள் அங்கு ஏன் கூடவேண்டும்? விழாவின் பெயர் வீணரின் விழா என்று வேண்டுமானால் இருக்கலாம்." 'விழாக் கொண்டாடுவோரைப் பார்த்தால் பரிதாபம் தான் வரும். நிலத்தில் பட்டுக் கன்னியரின் காலடி