94 நம்பிக்கை யுண்டாக்க வழி முயலுவார்கள். நலிந்தவர்களுக்கு நம்பிக்கையூட்டுவது நல்லதே. ஒவ்வொரு ஆண்டின் தொடக் கத்திலும் வாக்குறுதியளவில் நம்பிக்கைச் செய்திகள் தரப் பட்டபோதிலும், மாறுதல்கள் அதிகமாக நிகழ்வதில்லை. மறு ஆண்டின் தொடக்கத்திலும் அதே பல்லவிதான் பாடப்படு கிறது. மகத்தான மாறுதல்களைப்பற்றி எதுவும் கூற முடியா விட்டாலும், நிச்சயமான மாறுதல் ஒன்று நிகழ்கிறது. அது தான் உங்களுக்கு எதிரே சுவற்றில் உள்ள காலண்டரை அப்புறப்படுத்துவது. 1947ஆம் ஆண்டு காலண்டர் மாற்றப் பட்டு 1948ஆம் ஆண்டு காலண்டர் மாட்டப்படுகிறது. சிறு மாறுதல். நிச்சயமாக நடைபெறுகிறது - அவசியமானது. அழகிய ஓவியம் தீட்டப்பட்டிருந்தாலும் அதனடியில் பிணைக்கப்பட்டுள்ள நாளும் கிழமையும் காட்டும் ஏடு இனிப் பயன்படாது. நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை” என்பது மூதுரை. இன்று அரசாங்கத்தை நடத்தும் அமைச்சர் களிலிருந்து, அலைந்து திரியும் ஆண்டிவரை, நாளும் கிழமை யும் தேவையிருக்கிறது. ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்தம் என்றைக்கு ஆரம்பமாகிறது என்பதும், ஆருத்ரா தரிசனம் என்றைக்கு என்று பார்க்கவும் காலண்டர் தேவை ஆண்டிக்கும், அமைச்சருக்கும். இருவரும் கையில் பிடித்துள்ள ஏடுகளின் நிலையில், பெயரில் வேண்டுமானால் வேறுபாடு காணப்படும். வசதியுள்ளவர்கள், மதிப்புடையவர்கள், இவர் களுக்கு உயர்ந்தரகங்களில் காலண்டர்கள் இனாமாக வருகின் றன. இல்லாதவர்களுக்கு இனாமாகக் கிடைப்பதில்லை. அவர்கள் வருந்துவதில்லை. வருத்தப்படத் தேவையில்லை. கடைவீதியில் இரண்டண விலையில் கூவிக் கொடுக்கக் காலண்டர் இருக்கிறது. அச்சுவேலை உயர்ந்த நிலையில் அழகிய காலண்டர்கள்கூடச் சுலபத்தில் கிடைக்கின்றன. d. ஆனால் காலமொன்றிருந்தது! என்றைக்கு மாதம் பிறக் கிறது? ஆண்டு முடிய இன்னும் எத்தனை மாதங்களாகும்? என்று எவராலும் கூறமுடியாத நிலை. காலண்டர் இன்று வரையறுக்கப்பட்டு எல்லோராலும் எளிதில் அறியுமளவுக்கு
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/96
Appearance