பக்கம்:சிந்தனை மேடை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வாழ்வதுதான் சீர்திருத்தமே அற்ற மூடநம்பிக்கை மண்டிய வாழ்வு என்று புதிய கோணத்தில் மாற்றியும் நினைக்கலாம். நியாயமும், கருணையும், இல்லாத நிலையையே மூட நம்பிக்கையும், போலிச் சடங்குகளும், இருக்கும் நிலையாக வைத்துப் பேசினல் இந்தப் பிரச்னையைப் பற்றி நீங்கள் முற்றிலும் புதிய கோணத்தில் மாற்றிச் சிந்தித்துப் பார்க்க முடியும் சுயமான ஆர்வம் தன் விருப்பம் இல்லாமல் பிறர் மெச்ச வேண்டுமே” என்ற ஆசையில் கடைப்பிடிக்கிற எல்லாமே போலிச் சடங்கு கள்தாம். அப்படி மனத்தில் ஊன்ருமல் ஏனே தானே" என்று செய்கிற சடங்குகளைக் குறிப்பிடும் இன்னுெரு பெயரே *நாகரிகச் சடங்குகள்’ என்பது தன் விருப்பம் இல்லாமல், பலாபலன்களை அடிமனத்திலிருந்து வளர்த்து ஊன்றிச் சிந்திக்காமல், யாருக்காகவோ. எதற்காகவோ, கடைப் பிடிக்கிற நம்பிக்கைகள்தாம் இன்றை ப மூடநம்பிக்கைகள். அதிகாலையில் எழுந்து நீராடுவதோ, மரபு வழி வந்த பண் பாடுகளைக் கடைப்பிடிப்பதோ, தனித் தனிச் சமயக் கோட் பாடுகளை வழுவின்றி நம்புவதோ மூட நம்பிக்கை அல்ல. நாகரிகத்தின் பெயரால் நன்மை தீமைகளை எடை போடா மல் பின்பற்றுகிற ஆடம்பரங்களில் பல மூட நம்பிக்கையாக இருப்பதைப் புரிந்து கொண்டால் இப்போது நிமிர்ந்து நடக்கிற பலர் வெட்கப்பட்டுத் தலை குனிய நேரிடும். - நம் முன்னுல் இன்றைய நகரங்களில் படித்துப்பதவி, பணம், எல்லாம் நிறைய அடைந்து பகட்டாக வாழ்கிற பலர் சுயமான ஆர்வமில்லாமல் பல நல்ல காரியங்களையும் நம்பிக்கையில்லாத செய்கிற சாதாரணச் சடங்குகளைப் போலச் செய்கிருர்கள். அவர்களைப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? சுயமான ஆர்வத்தோடு செயல்படத் தெரியாது நம்பிக்கையற்றுச் செயல்படுகிறவன் அல்லவா தன்னுடைய ஒவ்வொரு காரியத்தையும் செய்யப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/24&oldid=825887" இலிருந்து மீள்விக்கப்பட்டது