பக்கம்:சிந்தனை மேடை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 வசதியாக இருப்பவர்களுக்கும் அவர்கள் நிலைக்கு ஏற்ப இந்த ஏக்கம் உண்டுதான். வாழ்த்து கொண்டிருக்கிற வாழ்க்கையை விட வாழ ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிற வாழ்க்கையில் கவர்ச்சியும் மோகமும் அதிகம். ஏனென்ருல் அது அருகில் வருவது போல் தோன்றியபடியே விலகி விலகிப் போய்க் கொண் டிருப்பது. தொழில் முறையிலுங் கூட: வக்கீலாயிருந்து தொழில் நடத்திக் கொண்டிருப்பவர், பக்கத்து வீட்டில் டாக்டராக இருப்பவரைப் பார்த்து அவ ருடைய வருமானம் தனக்குக் கிடைக்கவில்லையே என்று ஏங்குவ்தும், டாக்டர் தம்மைக் காட்டிலும் செழிப்பான வருவாய் உள்ள வியாபாரி ஒருவரைப் பார்த்துத் தம் முடைய வருமானம் குறைவு என்று ஏங்குவதும், வியாபாரி அரசியலில் புகழும் பதவியும் செல்வாக்குமாக வாழும் மந்திரியைப் பார்த்து ஏங்குவதுமாக வாழ்க்கையும், அதில் உள்ள மனோபாவங்களும் ஏதோ ஒரு விதத்தில் நிறைவு அடையாதவைகளாக இருந்தபடியே நிறைந்ததுபோல் தோன்றிக் கொண்டிருக்கின்றன. உள்ளே காற்று நிற்கும் இடைவெளிக் குழலாகி வெளியே மட்டும் பருத்துத் தோன் றும் மூங்கிலேப்போல் மனிதனுடைய மனத்தில் இடை வெளியாயிருக்கிற பகுதிகளை யெல்லாம் ஏக்கங்கள் நிறைத் துக் கொண்டிருக்கின்றன. ஏதாவது சில ஏக்கங்கள் தீர்ந்த தால் எப்பொழுது எதற்காகத் தோன்றியவை என்றே தெரி யாமல் வேறு சில ஏக்கங்கள் அந்த இடங்களில் வந்து நிரம் பிக் கொள்கின்றன. சுகத்துக்குக்கூட ஆசைப்படாமல் இருப்பதுதான் ப்ெரிய சுகம்’ என்று ஒரு தத்துவம் உண்டு. தத்துவங்களைத் தேடிச் சராசரி மனிதன் திருப்தி அடைய முடியாது. சரா சரி மனிதனுடைய வாழ்க்கை இலட்சியம் தன்னளவில் துன்பங்களைத் தவிர்ப்பதும் சகங்களைத் தேடுவதும்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/27&oldid=825893" இலிருந்து மீள்விக்கப்பட்டது