பக்கம்:சிந்தனை மேடை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சராசரி மனிதன் அதிகபட்சமாகச் செய்ய முடிந்த பொது நலச் செயல் தன்னைத் தவிர இன்னெரு மனிதனுக்குத் துன்பம் வரும்போது சிறிது அதுதாபம் கொள்வதுதான். தானும் ஒரு மனிதன் என்பதை நிரூபித்துக் கொள்வதற்காக அவன் இதற்குமேல் எதுவும் செய்ய முடியாது. ஆனல் இந்த அளவில் தானும் தன் மனிதத் தன்மையும் முழுவதும் போய் விடாமலாவது வாழ்வதற்குத் தெரியவேண்டும். தொழில் முறையில் மாறி மாறி ஏற்றத் தாழ்வுகள் அமைந்திருப்பதைப் பற்றிச் சொன்னேன். சராசரி மனி தனுக்கு முக்கியமான தொழில், வம்புகள் இல்லாமல் கூடிய வரை செளகரியமாக வாழ்வதுதான். செளகரியமாக வாழ் கிறவர்களுக்கும், ஏதோ சில காரணங்களால் அப்படி வாழ முடியாதவர்களுக்கும், நடுவில் உள்ள வாழ்க்கைப் போட்டி தான் உலகெங்கும் வியாபித்துள்ள ப்ெரிய கட்சிகளின் அடிப் படை உணர்ச்சி. செளகரியமாக இருப்பதாக மற்றவர் களால் நினைக்கப்படுகிறவர்களுக்கும் சில அசெளகரியங்கள் இருக்கும். ஏனென்ருல் உலக வாழ்க்கையில் முடிவான செளகரியங்கள் எவை என்பது இந்த விநாடி வரை கணிக்கப் படவில்லை. என்னென்ன செளகரியங்களைப் பெற்ருல்தான் திருப்தி அடைய முடியுமோ அவற்றைப் பெருமலே அந்தத் திருப்திகளை அடைந்துவிட முயல்கிறவன் தீரன். அவன் எந்தத் தொழிலைச் செய்து கொண்டிருந்தாலும் அதில் சுக மும், நிறைவும் காணமுடியும். அவன் செய்து நுகர்கிற தொழில் துன்பப்படுதல்’ என்ற ஒன்ருக இருந்தாலும் அதை அவளுல் பொறுத்து நிற்க முடியும். திட்டமான வாழ்க்கை தன்னுடைய வருவாய்க்கு மீறிய செலவும், செலவு செய்து காக்க முடியாத குடும்பமுமாக வாழ்கிற நகரவாசி யின் வாழ்க்கையில் திட்டப்படி நடப்பது என்பது முடியாத காரியம். அவனுடைய வாழ்க்கை ஆற்றில் விழுந்த துரும் பைப் போல இழுபடுவது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/28&oldid=825894" இலிருந்து மீள்விக்கப்பட்டது