பக்கம்:சிந்தனை மேடை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 பற்றி மட்டும் நிச்சயம் சொல்ல முடியாது. ஏனென்ருல் பேசு கிறவர்களே விடக் கேட்கிறவர்களுக்குச் சுதந்திரம் அதிகம். பேசுகிறவர்கள் கூட்டத்துக்குக் கண்டிப்பாக வந்துதான் ஆக வேண்டும். கேட்கிறவர்கள் அப்படி இல்லை. ஒரு கூட்டத்துக்கு ஆர்வத்தோடு வந்து கேட்பதில் அவர்களுக்கு எத்தனை சுதந் திரம் உண்டோ, அத்தனை சுதந்திரம் வந்து கேட்காமல் புறக் கணித்து விடுவதிலும் உண்டு. மேடைச் சொற்பொழிவு என் பது கடைவீதியைப் போன்றது. எல்லாக் கடைக் காரர்களும் தங்களிடமுள்ள பொருள்களே விற்பதற்குத் தயாராகத்தான் இருப்பார்கள். ஆளுல் எந்தக் கடையில் எதை வாங்கலாம் என்பது வாங்குகிறவர்களேப் ப்ொறுத்ததுதான். பிரசங்கம் கேட்கிறவ்ர்கள் எல்லாரும் வாங் கு கி ற வ ர் க ளே ப் போன்றவர்கள். கூட்டத்திலமர்ந்து கேட்பவர்களின் பக்குவ மறிந்து பேசி அவர்களை மகிழ்விக்கிற பேச்சாளன் எந்த இடத்தில் பூத்தாலும் ஆந்த இடத்தைச் சூழ மணந்து கொண்டிருக்கிற உயர்ந்த சாதிப் பூவ்ைப் போன்றவன். மேடையில் நின்ற படியே மலர மலரப் பார்த்த வண்ணம் கூட்டத்தைக் கவர்ந்து கொண்டு பேசுகிற பேச்சாளனின் பேச்சு கேட்கிற வர்களின் வாயைக் கட்டி அடக்கி விடும் உயர்ந்த சங்கீதத் தைப் போன்றது. இப்படிப் பேசும் சக்தி வாய்ந்தவர்கள் எவ்வளவு நேரம் பேசிலுைம் கேட்பவர்களுக்கு நேரமே தெரி யாது. அப்போதுதான் பேசுவதற்குத் தொடங்கிளுற் போன்று அந்தப் பேச்சில் ஒரு கவர்ச்சி முடிவின்றி நிலைத்திருக்கும். ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒரொரு விதமான சூழ்நிலை உண்டு. அதுதாபக் கூட்டங்களில் தலைமை வகிப்பவ: முதல் பேச்சாளர்கள் வரையில் எவரும் மறந்தும்கூட நகைச் சுவையைப் பயன்படுத்தக் கூடாது. கண்டனக் கூட்டங் களுக்கு ஒருவிதமான கடுமைத் தன்மை வேண்டும். அது தாபக் கூட்டம், பாராட்டுக் கூட்டம் இரண்டிலுமே மொத்தத்தில் புகழுரைகள் தாம் அதிகமாயிருக்கும். ஆளுல் ஒரே ஒரு வேறுபாடு உண்டு. அதுதாப்க் கூட்டத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/41&oldid=825924" இலிருந்து மீள்விக்கப்பட்டது