பக்கம்:சிந்தனை மேடை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 மூன்று முறைகள் சொல்லிய பின்பே கூட்டத்தில் சிலர் ஒரித்தும், சிலர் முகத்தைச் சுளித்தும் ஆரவாரப்படுத்திப் பேச்சாளரை எச்சரித்து அவருக்குத் தன் நினைவு வரச் செய் தார்கள். வேறு சில பேச்சாளர்கள் ஏதோ ஒர் அர்த்தத்தில் நினைத்து ஏதோ ஓர் அர்த்தத்தில் வாக்கியத்தைக் குழப்பிப் பேசி விடுவார்கள். பயனில சொல்லாமை என்பது ஒரு குற்றம் என்று திருவள்ளுவர் கூறியிருப்பது உங்களுக்கெல்லாம் தெரியும்’ என்று ஒருவர் கூட்டத்துப் பேச்சின் அவசரத்தில் சொல்லும் வாக்கியமானது ஒழுங்கான அர்த்தத்தில், அமைய வேண்டு மாளுல் பயனில சொல்லுதல் என்பது ஒரு குற்றம் என்று திருவள்ளுவர் கூறியிருப்பது உங்களுக்கெல்லாம் தெரியும்’ என்று இருக்கவேண்டும். உற்று உணர்ந்தால்தான் இந்தப் பிழைகள் எல்லாம் தெரியும். எப்பொழுது முடியும்? குறிப்பிட்ட நேரத்துக்குக் கூட்டம் தொடங்கப் பெருத பட்சத்தில் அது எப்போது தொடங்கும் என்று பேச்சுக் கேட்க வந்தவர்கள் காத்திருப்பார்கள். ஒவ்வொரு பேச்சாளராய்த் தத்தம் கருத்துக்களைக் கேட்பவருடைய மண்டையில் கனக்கச் செய்தபின் கூட்டம் எப்போது முடியும்?’ என்று எல்லார் மனத்திலும் ஆவல் எழும். இந்த இரண்டு கேள்விகளில் முதலாவது கேள்வி ஒரு கூட்டத்தின் நுனி. இரண்டாவது கேள்வி ஒரு கூட்டத்தின் மறுதுணி. நாகரிகமடைந்துவிட்ட புதிய சமுதாயத்தின் அன்ருட நிகழ்ச்சிகளில் பொதுக் கூட்டங்களும், சொற்பொழிவுகளும் கூட முக்கியமானவையாகி விட்டன. சொற்பொழிவாளர் கள் என்ன பேசப் போகிருர்கள் என்பதைக் கேட்க நேர மின்றி அடுத்த கூட்டத்துக்குப் பறந்து கொண்டு ஓடும் அவசரத் தலைவர்கள். தலைவர் உரையை முழுவதும் கேட்கிற அளவுக்கு முன் கூட்டியே வர முடியாமல் தாம் பேசவேண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/45&oldid=825932" இலிருந்து மீள்விக்கப்பட்டது