பக்கம்:சிந்தனை மேடை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 டிய நேரத்துக்கு மட்டுமே ஓடி வர முடிந்த அவசரச் சொற் பொழிவாளர்கள். பொதுக் கூட்டங்களில் உறுதியான நற்பலன் கூட்டங் களை ஏற்பாடு செய்கிறவர்கள் தலைவருக்கும் பேச்சாளருக் கும் அணிவது மாலையாகத்தான் இருக்கும் என்பது. உறுதி சொல்ல முடியாத பலன் கூட்டத்தில் இருந்து கேட்பவர்கள் என்ன தருவார்கள் என்பது. கைதட்டல் (தொடர வேணும் என்ற அர்த்தத்திலும் இருக்கலாம்-முடிக்க வேணும் என்ற அர்த்தத்திலும் இருக்கலாம்) கல் தட்டல், விசில், ஆய், ஊய், எது வேண்டுமானலும் கேட்பவர்களிடமிருந்து பேசு கிறவனுக்குக் கிடைக்கலாம். பேசுவதற்குச் சாமர்த்தியம் இல்லை என்ருலும் கேட்கிறவர்கள் தன்னை என்ன செய்யச் சொல்லிக் கையைத் தட்டுகிருர்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்காகவாவது ஒரு பேச்சாளனுக்குச் சாமர்த் தியம் வேணும். கைதட்டலின் தொணி நோக்கி அந்த அர்த்தத்தைப் புரிந்து கொள்ளலாம். சிலர் ஆரம்பித்த பேச்சை எப்போது முடிப்பது என்று தெரியாமல் வளர்த் துக் கொண்டே தவித்தும், கேட்பவர்களேத் தவிக்கச் செய்தும் வேதனைப்படுவதுபோல் மற்றும் சிலர் ஆரம்பித்து விட்ட பேச்சை எப்படி முடிப்பது என்று தெரியாமல் வளர்த்துக் கொண்டே முடிவு தெரிகிறவரை தடுமாறிப் பேச்சைக் குழப்பிக் கொண்டிருப்பார்கள். சிலர் கூட்டம் முடிகிற சமயத்தில் நன்றியுரை கூறுகிறபோது இப்படி முடிக்கத் தெரியாமல் தவித்துத் தவித்து நன்றியைக் கூறிக் கொண்டே இருப்பதுண்டு. சிக்கல் விழுந்துவிட்ட் நூல் கற்றையைப்போல் மறு நுனி தெரியாமல் வழவழவென்று போய்க் கொண்டே இருக்கும் இந்தப் பேச்சு. இப்படி "முடிவில்லாத நன்றியை இந்த மனித ஆசாபாசங்கள் நிறைந்த உலகில் அடைவது அரிதென்ருலும்-அது பொருத்தமான இடத்தில் முடியுமென்று தெரிந்தால் அப்படிக் கச்சிதமாக முடிக்கிற நன்றியுரைக்கு நாம் நூறு தரம் நன்றி கூறலாம். --- தத்துவ ரீதியாகச் சொன்னல் இந்த உலகமேகூட ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/46&oldid=825933" இலிருந்து மீள்விக்கப்பட்டது