பக்கம்:சிந்தனை மேடை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 "ஒப்பில்லாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை" - என்று பாரதி வாழ்த்தி மகிழ்ந்த பாரத சமுதாயம் அதன் திடமான பெருமையிலிருந்து இனி என்றும் குன்றிப் போய்" விடக் கூடாது என்பதில் இந்த விசால பாரதத்தின் குடி மகன் ஒவ்வொருவனுக்கும் கவலையும் அக்கறையும் வேண்டும். பலமான உழைப்பின் பேரில் கட்டி முடிக்க வேண்டிய சமுதாய நன்மைகளைச் சொப்பனம் காண்பதைப் போன்ற தனித்தனி மனிதர்களின் சில்லறைச் சுகங்களால் பலவீனப்படுமாறு செய்துவிடக் கூடாது. நாடக மேடைகளிலும், திரைப்பட அரங்குகளிலும் நாம் காண்கிற கதை வாழ்க்கை மூன்று அல்லது நான்கு. மணி நேர எல்லைக்குள் முடிந்து விடக் கூடியது. அதில் வருகிற கதாபாத்திரங்கள் படுகிற சுகதுக்கங்களுக்கு அந்த மூன்று நான்கு மணி நேரம்தான் கால எல்லை. வாழ்க்கை யும் அதே போல வேகமாகவோ, பரபரவென்ருே வளரவும் நிறையவும், வேண்டுமென்று ஆசைப்படுவது சிறுபிள்ளை மனப்பான்மை. திரைப்படங்களிலும், நாடகங்களிலும், முன்பாதிக் கதையில் துன்புற்ற கதாநாயகன் பின்பாதிக் கதையில் மடமடவென்று செல்வச் செழிப்புப் பெற்று விடு வதைக் காட்டுகிருர்கள். பார்த்துக் கொண்டிருக்கும் அவையினரை இந்த நடிப்புச் சுகமும் நடிப்பு வளர்ச்சியும் மயக்குகின்றன. சொந்த வாழ்க்கையில் அவ்வளவு வேக மாகச் சுகங்களை அடைய முடியாமல் தவிக்கின்ற பலரை இந்த வேகமான கற்பனைச் சுகம் கவர்ந்து மயக்குகிறது. நடைமுறை உலகம் மயக்கம் என்ற சொல்லுக்கு ஒரு பொருளை எப்படி உணர வேண்டுமோ அப்படி உணராமல் பிறழ உணர்தல்:என்று பொருள். திரைப்படக் கதையில் வருகிற சுகங்களைச் சொந்த வாழ்வுக்கும் ஆசைப்பட்டு ஏங்குவது இப்படிப் பிறழ உணர்வதுதான். நடைமுறை உலகில் சுகங்கள் கட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/48&oldid=825938" இலிருந்து மீள்விக்கப்பட்டது