பக்கம்:சிந்தனை மேடை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

இது நவபாரதி பிரசுரத்தின் மூன்றாவது வெளியீடு. 'சிந்தனைமேடை' என்னும் புதிய பாணிக் கட்டுரைத் தொகுதியை ஆசிரியர் நா. பா. அவர்கள் பதினைந் தாண்டுகளுக்கு முன் 'கல்கி' வார இதழ் மூலம் அறிமுகப் படுத்தினார்கள். அந்தத் தொடரே புதிதாக அப்போது அவர்களால் தான் வார்ப்படம் செய்யப்பட்டது. அதன்பின் சில இலக்கிய அமைப்புக்கள் ஆசிரியர் அனுமதி பெற்று அப்பெயரைப் பயன் படுத்தின. பின்பு பட்டிமன்றம், கருத்தரங்கம் போல, மேடைச் சொற்பொழிவு வகையிலேயே 'சிந்தனைமேடை' என்ற பிரிவு ஒன்றும் ஏற்பட்டு விட்டது.

ஆசிரியரின் பதினைந்து கட்டுரைகள் இத்தொகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரைகளை நவபாரதி பிரசுரத்தின் வெளியீடுகளில் ஒன்றாக வெளியிட அளித்த ஆசிரியருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். எம் முந்தியநூலாகிய கடற்கரை நினைவுகளுக்கு, ஆதரவளித்தது போலவே வாசகர்கள் இதற்கும். ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

சு. திருமலை
பதிப்பாளர்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/5&oldid=1319168" இலிருந்து மீள்விக்கப்பட்டது